ETV Bharat / sports

தாய்லாந்து சென்ற சாய்னா & கோ!

author img

By

Published : Jan 3, 2021, 8:11 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த மாதம் தாய்லாந்து மற்றும் பாங்காக்கில் நடைபெறவுள்ள பேட்மிண்டன் தொடருக்கான இந்திய அணி இன்று தாய்லாந்து சென்றது.

Saina and Co. leave for Thailand, Sindhu to fly from London
Saina and Co. leave for Thailand, Sindhu to fly from London

சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காக் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பி.டபிள்யூ.எஃப். வேர்ல்ட் ஃபைனல்ஸ் தொடரும் ஜனவரி 27 முதல் 31ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இத்தொடர்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. ஏற்கனவே கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பேட்மிண்டன் வீரர்கள் பல்வேறு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகின்றனர். அதனால் தற்போது நடைபெறவுள்ள பாங்காக், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்களுக்கான எட்டு பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவால், சிக்கி ரெட்டிம் அஸ்வினி பொன்னப்பா, ஆடவர் பிரிவில் பாருபள்ளி காஷ்யப், சாய் பிரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இன்று தாய்லாந்து சென்றனர். மேலும் லண்டனில் இருக்கும் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவும் பாங்காக்கிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜெமிசன் பந்துவீச்சில் சுருண்ட பாகிஸ்தான்!

சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காக் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பி.டபிள்யூ.எஃப். வேர்ல்ட் ஃபைனல்ஸ் தொடரும் ஜனவரி 27 முதல் 31ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இத்தொடர்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. ஏற்கனவே கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பேட்மிண்டன் வீரர்கள் பல்வேறு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகின்றனர். அதனால் தற்போது நடைபெறவுள்ள பாங்காக், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்களுக்கான எட்டு பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவால், சிக்கி ரெட்டிம் அஸ்வினி பொன்னப்பா, ஆடவர் பிரிவில் பாருபள்ளி காஷ்யப், சாய் பிரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இன்று தாய்லாந்து சென்றனர். மேலும் லண்டனில் இருக்கும் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவும் பாங்காக்கிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜெமிசன் பந்துவீச்சில் சுருண்ட பாகிஸ்தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.