ETV Bharat / sitara

'சிங்கம் 3' படம் இயக்க தயாராக இருக்கிறேன்- இயக்குநர் ரோகித் ஷெட்டி - இயக்குநர் ரோகித் ஷெட்டி

’சூரியவன்ஷி’ படத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் ’சிங்கம் 3’ படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் ரோகித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

'சிங்கம் 3' படம் இயக்க தயாராயிருக்கிறேன்- இயக்குநர் ரோகித் ஷெட்டி
'சிங்கம் 3' படம் இயக்க தயாராயிருக்கிறேன்- இயக்குநர் ரோகித் ஷெட்டி
author img

By

Published : Feb 19, 2020, 7:42 PM IST

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரியவன்ஷி. அக்க்ஷய் குமார், கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தை புரொமோஷன் செய்யும் பணியில் ரோஹித் ஷெட்டி இறங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'வெள்ளிக்கிழமை என்னுடைய படம் வெளியாகிறது என்றால் எனக்கு சிறிது பயம் இருக்கும்.

திரைப்படம் வெளியாகும்போது சிறிதளவிலாவது, இயக்குநருக்கு பயம் இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு என்ன மாதிரியான கதை பிடிக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டுதான் நான் படம் இயக்குவேன். அந்த வகையில்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளேன். இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரோஹித், 'சூரியவன்ஷி படத்திற்கு பிறகு, தான் ஹிந்தியில் 'சிங்கம் 3' படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக ரோகித் இயக்கத்தில் வெளியான ’சிங்கம்’ மற்றும் ’சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பியர் கிரில்ஸுடன் ஸ்டைலாக நிற்கும் ரஜினி - 'மேன் வெர்சஸ் வைல்ட்' மோஷன் போஸ்டர் வெளியீடு!

பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரியவன்ஷி. அக்க்ஷய் குமார், கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தை புரொமோஷன் செய்யும் பணியில் ரோஹித் ஷெட்டி இறங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'வெள்ளிக்கிழமை என்னுடைய படம் வெளியாகிறது என்றால் எனக்கு சிறிது பயம் இருக்கும்.

திரைப்படம் வெளியாகும்போது சிறிதளவிலாவது, இயக்குநருக்கு பயம் இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு என்ன மாதிரியான கதை பிடிக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டுதான் நான் படம் இயக்குவேன். அந்த வகையில்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளேன். இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரோஹித், 'சூரியவன்ஷி படத்திற்கு பிறகு, தான் ஹிந்தியில் 'சிங்கம் 3' படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக ரோகித் இயக்கத்தில் வெளியான ’சிங்கம்’ மற்றும் ’சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பியர் கிரில்ஸுடன் ஸ்டைலாக நிற்கும் ரஜினி - 'மேன் வெர்சஸ் வைல்ட்' மோஷன் போஸ்டர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.