ETV Bharat / sitara

நடிகர் சங்க கட்டடம்... யாராலும் தடுக்க முடியாது: விஷால் - actor association building

சென்னை: நடிகர் சங்க கட்டடம் முழுமையாக நிறைவு பெற வேண்டும், அதை யாராலும் தடுக்க முடியாது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

விஷால்
author img

By

Published : Jun 9, 2019, 11:44 AM IST

நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும்போது என்னென்ன வாக்குறுதிகளை அளித்தோமோ அவை அனைத்தையுமே நிறைவேற்றி வருகிறோம் எனத் தெரிவித்தார். நடிகர் சங்க கட்டடப் பணி இன்னும் ஆறு மாத காலத்தில் முடிவுபெறவுள்ளதாக கூறிய அவர், கட்டடம் முழுமையாக நிறைவுபெற வேண்டும் எனவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

நடிகர் சங்க கட்டடம் மூலமாக கிடைக்கப்பெறும் தொகையை நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகையாகவும், அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவித்தொகையாகவும் கொடுக்க பயன்படும் என்றார்.

பொதுச்சொத்தை காப்பாற்ற வேண்டும்: நடிகர் விஷால்!

நடைபெறவுள்ள நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்த, விஷால், பொதுச்சொத்தை காப்பாற்றுவதற்குத்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.

தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் நேரில் சந்திக்கவுள்ளோம் என கூறிய அவர், விரைவில் கட்டடப் பணிகள் நிறைவுபெறும் என உறுதியளித்தார். அது தொடர்பாகவும் பேசவுள்ளோம் என்றார்.

நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும்போது என்னென்ன வாக்குறுதிகளை அளித்தோமோ அவை அனைத்தையுமே நிறைவேற்றி வருகிறோம் எனத் தெரிவித்தார். நடிகர் சங்க கட்டடப் பணி இன்னும் ஆறு மாத காலத்தில் முடிவுபெறவுள்ளதாக கூறிய அவர், கட்டடம் முழுமையாக நிறைவுபெற வேண்டும் எனவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

நடிகர் சங்க கட்டடம் மூலமாக கிடைக்கப்பெறும் தொகையை நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகையாகவும், அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவித்தொகையாகவும் கொடுக்க பயன்படும் என்றார்.

பொதுச்சொத்தை காப்பாற்ற வேண்டும்: நடிகர் விஷால்!

நடைபெறவுள்ள நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்த, விஷால், பொதுச்சொத்தை காப்பாற்றுவதற்குத்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.

தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் நேரில் சந்திக்கவுள்ளோம் என கூறிய அவர், விரைவில் கட்டடப் பணிகள் நிறைவுபெறும் என உறுதியளித்தார். அது தொடர்பாகவும் பேசவுள்ளோம் என்றார்.

மிக்க சங்க தேர்தல் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கவுள்ளோம்_ நடிகர் விஷால்

நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட நாங்களும் போட்டியிட உள்ளோம் என்னென்ன வாக்குறுதிகளை அளித்து என்னென்ன எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பது தெரியும். அது போக கட்டிடப் பணிகள் இன்னும் 6 மாத காலத்தில் முடிவு பெறும். ஏன் மற்றொரு எதிரணி என்றால் நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வருவதை தடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கட்டிடம் முழுமையாக முழுமை பெற வேண்டும். அதை யாராலும் தடுக்க முடியாது. சங்க கட்டிடம் என்ற இந்த குழந்தை பிறக்கும் நேரம் இது  நடிகர் சங்க கட்டிடம் மூலமாக வரும் தொகையை நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை போன்றவற்றை உயர்த்தி கொடுக்க பயன்படும். அதனால் தான் மீண்டும் நான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன். பாண்டவர் அணியில் பழம்பெரும் நடிகை இல்லாத அவர்கள் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. தான் இந்த தேர்தலில்  பொது சொத்தை காப்பாற்றுவதற்கும் என் நேர்மையை நிலைநாட்டுவதற்கும் இந்த எலக்ஷனில் போட்டியிடுகிறேன். எதிரணியில் போட்டியிடுபவர்கள் என்ன காரணத்திற்காக நிற்கிறார்கள் என்பதை என்னால் கூற முடியாது 2 வாக்குகள் அதிகம் வாங்குவதற்காக என்னால் அவர்கள் இது கொச்சைப்படுத்திப் பேச முடியாது . தேர்தல் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க உள்ளோம் .கூடிய விரைவில் கட்டிட பணிகள் முடிவு பெற்ற பிறகு கட்டிட திறப்பு விழா குறித்த தகவல்கள் முன்பே அவர்களுக்கு தெரிவிக்க உள்ளோம். என்னைப் பொறுத்தவரை பொது சொத்தை காப்பாற்ற வேண்டும் இந்த முடிவு இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.