பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர், பவுன்ராஜ். இந்தப் படங்களில் மதுரை வட்டார மொழி வழக்கில் பேசி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தார், நடிகர் பவுன்ராஜ்.
ரஜினி முருகன் படத்தில் 'என்னடா இது... மதுரக்காரனுக்கு வந்த சோதனை' என்று நடிகர் பவுன் ராஜ் பேசிய வசனத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்நிலையில், பவுன் ராஜ் இன்று (மே 15) நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் பொன்ராம் தனது சமூக வலைதளத்தில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
-
#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் pic.twitter.com/uxOdKTHp2z
— ponram (@ponramVVS) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் pic.twitter.com/uxOdKTHp2z
— ponram (@ponramVVS) May 15, 2021#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் pic.twitter.com/uxOdKTHp2z
— ponram (@ponramVVS) May 15, 2021
இதனையடுத்து பவுன்ராஜூக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் மாறன்: கலைஞனின் மரணம் எளிதில் கடக்கக்கூடியதா..?