ETV Bharat / sitara

சொந்தமாக இசை நிறுவனத்தை தொடங்கிய சுந்தர் சி பட தயாரிப்பாளர்!

author img

By

Published : Oct 23, 2021, 10:01 PM IST

சுந்தர் சியின் புதியப் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் சொந்தமாக வோனி மியூசிக் என்ற இசை ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கியுள்ளது.

ந

சென்னை: 'கட்டப்பாவ காணோம்' படத்தின் இயக்குநர் மணி செயோன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

இந்தப் படத்தை வி.ஆர். டெல்லா ஃபிலிம் பேக்டரி சார்பாக மணிகண்டன் தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் 19ஆவது படமாகும். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் 19-வது படத்தை தயாரிக்கும் வி ஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி சொந்தமாக வோனி மியூசிக் என்ற இசை ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது.

ஷீரடி சாய்பாபா மீதான பற்று காரணமாக சாய்பாபா பாடல் உருவாகியுள்ளது. இப்பாடலை பாடகி சாதனா சர்கம் பாடியுள்ளார். ஜெகனின் வரிகளுக்கு விக்னேஷ்வர் கல்யாணராமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த நிறுவனம் 'வேயப்' எனும் செயலி தொடங்கியது. இதன் மூலம் புதிய இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே வோனி மியூசிக் தொடங்கியிருப்பதன் நோக்கம் என வி.ஆர். டெல்லா ஃபிலிம் பேக்டரி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வி.ஆர். டெல்லா ஃபிலிம் பேக்டரியின் நிறுவனர் வி ஆர் மணிகண்டராமன் ராமபத்ரன் கூறுகையில், "எங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பாடல்களை வெளியிடுவதோடு, மற்ற திரைப்படங்களின் ஆடியோவையும் வெளியிடுவோம்.

'கட்டப்பாவ காணோம்' புகழ் மணி சேயோன் இந்த படத்தை இயக்குகிறார். தான்யா ஹோப் மற்றும் ஹெபா படேல் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை உள்ளிட்டவை விரைவில் வெளியிடப்படும். மேலும் சில படங்களும் திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: திருமண நாளில் யாரும் செய்யாததை செய்த சுந்தர் சி - குஷ்பூ ஷேரிங்

சென்னை: 'கட்டப்பாவ காணோம்' படத்தின் இயக்குநர் மணி செயோன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

இந்தப் படத்தை வி.ஆர். டெல்லா ஃபிலிம் பேக்டரி சார்பாக மணிகண்டன் தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் 19ஆவது படமாகும். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் 19-வது படத்தை தயாரிக்கும் வி ஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி சொந்தமாக வோனி மியூசிக் என்ற இசை ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது.

ஷீரடி சாய்பாபா மீதான பற்று காரணமாக சாய்பாபா பாடல் உருவாகியுள்ளது. இப்பாடலை பாடகி சாதனா சர்கம் பாடியுள்ளார். ஜெகனின் வரிகளுக்கு விக்னேஷ்வர் கல்யாணராமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த நிறுவனம் 'வேயப்' எனும் செயலி தொடங்கியது. இதன் மூலம் புதிய இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே வோனி மியூசிக் தொடங்கியிருப்பதன் நோக்கம் என வி.ஆர். டெல்லா ஃபிலிம் பேக்டரி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வி.ஆர். டெல்லா ஃபிலிம் பேக்டரியின் நிறுவனர் வி ஆர் மணிகண்டராமன் ராமபத்ரன் கூறுகையில், "எங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பாடல்களை வெளியிடுவதோடு, மற்ற திரைப்படங்களின் ஆடியோவையும் வெளியிடுவோம்.

'கட்டப்பாவ காணோம்' புகழ் மணி சேயோன் இந்த படத்தை இயக்குகிறார். தான்யா ஹோப் மற்றும் ஹெபா படேல் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை உள்ளிட்டவை விரைவில் வெளியிடப்படும். மேலும் சில படங்களும் திட்டமிட்டு வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: திருமண நாளில் யாரும் செய்யாததை செய்த சுந்தர் சி - குஷ்பூ ஷேரிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.