சென்னை: அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். இதில் தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி தயாரித்துள்ளார். இவரே இப்படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
'மாயோன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை சிபிராஜ் கொடுத்து முடித்தார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான அருண்மொழி கூறியதாவது, திரைக்கதை எழுத்தாளராக, மாயோனுடனான எனது பயணம், ஒரு தனித்துவமான, சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது.
இயக்குநர் கிஷோர் திரைக்கதையை சரியாக உள்வாங்கிகொண்டு, சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன், படத்தை வடிவமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படைப்பு சரியாக உருவாவதற்கு, முழு ஆதரவு தந்து உழைத்த, நடிகர் சிபிராஜ் அவர்களுக்கு நன்றி.
எல்லாவற்றிற்கும் மேலாக, இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தது, எங்கள் குழுவினர் அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. "மாயோன்" எங்கள் மொத்த குழுவினரும், மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ள படைப்பு.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் ஆடியோ, ட்ரெய்லர், உலகளாவிய திரை வெளியீட்டு தேதியை, விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றார்.