ETV Bharat / sitara

'நீங்கள் என்ன ரஜினியா?’ - ரசூல் பூக்குட்டியை சீண்டிய பிரசாத் பிரபாகரன்!

author img

By

Published : Apr 7, 2019, 4:47 PM IST

'நீங்கள் என்ன ரஜினியா அல்லது மம்முட்டியா? என கேட்டு ரசூல் பூக்குட்டியின் ஈகோவை தூண்டிவிட்டு நடிக்க வைத்தேன்' - 'ஒரு கதை சொல்லட்டுமா' படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகரன் மனம்திறந்த பேட்டி.

இயக்குநர் பிரசாத் பிரபாகரன்

பாலிவுட் திரை உலகில் முன்னணி சவுன்ட் இஞ்சினியராக வலம் வருபவர் ரசூல் பூக்குட்டி. இவர், ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்று உலக புகழ் பெற்றார். இந்தியாவே இவரை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இயக்குநர் பிரசாத் பிரபாகரன் இயக்கியுள்ள 'ஒரு கதை சொல்லட்டுமா' என்ற படத்தின் மூலம் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ளார்.

இயக்குநர் பிரசாத் பிரபாகரன்

கேரள மாநிலம் திருச்சூரில் வருடா வருடம் நடக்கும் பிரமாண்டமான பூரம் திருவிழாவை ஒளிப்பதிவு செய்யும் ஒரு சவுண்ட் இஞ்சினியரின் கதைதான் 'ஒரு கதை சொல்லட்டுமா'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ஆஸ்கர் விருதுக்காக இறுதிச் சுற்று வரை சென்று உலகின் 15 ஆயிரம் படங்களில் 347வது இடத்தினை பெற்றுள்ளது.

மேலும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியை நடிகன் ஆக்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகரன் 'ஒரு கதை சொல்லட்டுமா' படத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யக பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அவர் நினைவுகூர்ந்த நிகழ்வுகள் பின்வருமாறு,

நான் நன்றி சொல்ல வேண்டியது மக்களுக்குத்தான். இப்படம் தமிழகம் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு கதை சொல்லட்டுமா படத்திற்கு நீங்கள் அளித்துள்ள வரவேற்பிற்கு நன்றி.

இந்த படம் எடுக்க வேண்டும் என்று உங்களை தூண்டியது எது?

இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி ’ரசூல் பூக்குட்டி’யாகவே நடித்துள்ளார். 64 ஏக்கர் இடத்தில், 10 லட்சம் மக்கள் ,100 யானைகள், 500 செண்டா வாத்தியம். இந்த இடத்தில் நிறம், வாசம் எதுவுமே இல்லாமல் இந்த பூரம் விழா கொண்டாடுவதற்காக மக்கள் கூடுகின்றனர். இந்த மேஜிக்கை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் சவாலாகவே இருந்தது.

இதில், 8 கே முதல் 1 டி சி வரை உள்ள 24 கேமராக்களை பயன்படுத்தி உள்ளேன். ஒரு விழாவின் ஒலிப்பதிவை பதிவு செய்யும் பணியில் இருக்கும்போது ஒரு தடை வந்தால் அவர் என்ன செய்வார் என்பதுதான் கதை. இந்த படத்திற்கு ரீடேக் எதுவும் இல்லை.

ஒரு கதை சொல்லட்டுமா உங்களை கவர்ந்ததா?

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் 64 ஏக்கர் இடத்தில் 10 லட்சம் மக்கள் கூடும் இடத்தில் 25 ஆயிரம் மக்கள் அனுமதிக்கும் நிலை பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வாய்ப்புகள் உள்ளது. 100 யானைகளுக்கு பதில் ஒரு அஞ்சு பத்து யானைகள் பயன்படுத்தலாம் செண்டை மேளம்களுக்கு பதில் டெக்னாலஜி அதிகரிக்கும். அதனால் நம் கலாச்சாரத்தை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. தமிழக கலாசாரம், கேரள கலாசாரம் என்று தனியாக இல்லை அனைத்தும் சேர்ந்ததுதான் இந்திய கலாச்சாரம். நமது கலாச்சாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

எந்த அனுபவமும் இல்லாத இயக்குநராக நீங்கள் சொல்ல விரும்புவது எது?

ஒரு விவசாயி மகனாக பிறந்து எந்த ஒரு சினிமா அனுபவம் இல்லாமல் ஒரு நல்ல படைப்பை அளித்தேன் என்ற மகிழ்ச்சி நெஞ்சில் நிறைவாக இருக்கு. சாதாரணமான ஒரு கலைஞனாக வாழ்ந்து இறந்து போவதை விட மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் அதுதான் இந்த படம்.

ரசூல் பூக்குட்டியை நடிகனாக மாத்தியது எப்படி?

80 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில இடங்களில் படத்திற்கு ட்ராமா தேவைப்பட்டது. அதை அவரிடம் கூறினோம், ஆனால் அவர் நீ என்னை ஒரு கதாநாயகனாக எடுக்க முயற்சி செய்கிறாய் அது என்னுடைய தொழில் அல்ல எனக் கூறி மறுத்துவிட்டார். அப்பொழுது நான் அவருடைய ஈகோவை தூண்டி விட்டேன். 'நீங்கள் யார் ரஜினி அல்லது மம்முட்டி யா என்று கூறி மொக்கையாக நடிக்கிறீர்கள் என்று தூண்டிவிட்டு தான் இந்த படத்தை எடுத்து முடித்தேன்.

படத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

செவி இரண்டுமே விழி ஆகுமே அதுதான் படத்தின் முக்கிய கருத்து. காதுகளில் கேட்கப்படுவது தான் காட்சியாக மாறுகிறது. அதனால் இந்த படத்தை பார்வையற்றவர்களுக்காக நான் சமர்ப்பிக்கிறேன் என அவர் கூறினார்.

பாலிவுட் திரை உலகில் முன்னணி சவுன்ட் இஞ்சினியராக வலம் வருபவர் ரசூல் பூக்குட்டி. இவர், ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்று உலக புகழ் பெற்றார். இந்தியாவே இவரை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இயக்குநர் பிரசாத் பிரபாகரன் இயக்கியுள்ள 'ஒரு கதை சொல்லட்டுமா' என்ற படத்தின் மூலம் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ளார்.

இயக்குநர் பிரசாத் பிரபாகரன்

கேரள மாநிலம் திருச்சூரில் வருடா வருடம் நடக்கும் பிரமாண்டமான பூரம் திருவிழாவை ஒளிப்பதிவு செய்யும் ஒரு சவுண்ட் இஞ்சினியரின் கதைதான் 'ஒரு கதை சொல்லட்டுமா'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ஆஸ்கர் விருதுக்காக இறுதிச் சுற்று வரை சென்று உலகின் 15 ஆயிரம் படங்களில் 347வது இடத்தினை பெற்றுள்ளது.

மேலும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியை நடிகன் ஆக்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகரன் 'ஒரு கதை சொல்லட்டுமா' படத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யக பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அவர் நினைவுகூர்ந்த நிகழ்வுகள் பின்வருமாறு,

நான் நன்றி சொல்ல வேண்டியது மக்களுக்குத்தான். இப்படம் தமிழகம் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு கதை சொல்லட்டுமா படத்திற்கு நீங்கள் அளித்துள்ள வரவேற்பிற்கு நன்றி.

இந்த படம் எடுக்க வேண்டும் என்று உங்களை தூண்டியது எது?

இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி ’ரசூல் பூக்குட்டி’யாகவே நடித்துள்ளார். 64 ஏக்கர் இடத்தில், 10 லட்சம் மக்கள் ,100 யானைகள், 500 செண்டா வாத்தியம். இந்த இடத்தில் நிறம், வாசம் எதுவுமே இல்லாமல் இந்த பூரம் விழா கொண்டாடுவதற்காக மக்கள் கூடுகின்றனர். இந்த மேஜிக்கை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் சவாலாகவே இருந்தது.

இதில், 8 கே முதல் 1 டி சி வரை உள்ள 24 கேமராக்களை பயன்படுத்தி உள்ளேன். ஒரு விழாவின் ஒலிப்பதிவை பதிவு செய்யும் பணியில் இருக்கும்போது ஒரு தடை வந்தால் அவர் என்ன செய்வார் என்பதுதான் கதை. இந்த படத்திற்கு ரீடேக் எதுவும் இல்லை.

ஒரு கதை சொல்லட்டுமா உங்களை கவர்ந்ததா?

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் 64 ஏக்கர் இடத்தில் 10 லட்சம் மக்கள் கூடும் இடத்தில் 25 ஆயிரம் மக்கள் அனுமதிக்கும் நிலை பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க வாய்ப்புகள் உள்ளது. 100 யானைகளுக்கு பதில் ஒரு அஞ்சு பத்து யானைகள் பயன்படுத்தலாம் செண்டை மேளம்களுக்கு பதில் டெக்னாலஜி அதிகரிக்கும். அதனால் நம் கலாச்சாரத்தை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. தமிழக கலாசாரம், கேரள கலாசாரம் என்று தனியாக இல்லை அனைத்தும் சேர்ந்ததுதான் இந்திய கலாச்சாரம். நமது கலாச்சாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

எந்த அனுபவமும் இல்லாத இயக்குநராக நீங்கள் சொல்ல விரும்புவது எது?

ஒரு விவசாயி மகனாக பிறந்து எந்த ஒரு சினிமா அனுபவம் இல்லாமல் ஒரு நல்ல படைப்பை அளித்தேன் என்ற மகிழ்ச்சி நெஞ்சில் நிறைவாக இருக்கு. சாதாரணமான ஒரு கலைஞனாக வாழ்ந்து இறந்து போவதை விட மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் அதுதான் இந்த படம்.

ரசூல் பூக்குட்டியை நடிகனாக மாத்தியது எப்படி?

80 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில இடங்களில் படத்திற்கு ட்ராமா தேவைப்பட்டது. அதை அவரிடம் கூறினோம், ஆனால் அவர் நீ என்னை ஒரு கதாநாயகனாக எடுக்க முயற்சி செய்கிறாய் அது என்னுடைய தொழில் அல்ல எனக் கூறி மறுத்துவிட்டார். அப்பொழுது நான் அவருடைய ஈகோவை தூண்டி விட்டேன். 'நீங்கள் யார் ரஜினி அல்லது மம்முட்டி யா என்று கூறி மொக்கையாக நடிக்கிறீர்கள் என்று தூண்டிவிட்டு தான் இந்த படத்தை எடுத்து முடித்தேன்.

படத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

செவி இரண்டுமே விழி ஆகுமே அதுதான் படத்தின் முக்கிய கருத்து. காதுகளில் கேட்கப்படுவது தான் காட்சியாக மாறுகிறது. அதனால் இந்த படத்தை பார்வையற்றவர்களுக்காக நான் சமர்ப்பிக்கிறேன் என அவர் கூறினார்.

ஆஸ்கர்  இறுதி  சுற்றுக்கு சென்ற ரசூல் பூக்குட்டியின் "ஒரு கதை சொல்லட்டுமா "


திருச்சூர் பூரம் திருவிழா அவை ஒளிப்பதிவு செய்யும் ஒரு சவுண்ட் இஞ்சினியரின் கதைதான் ஒரு கதை சொல்லட்டுமா. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 
இந்தப் படம். ஆஸ்கார் விருதுக்கான இறுதிச் சுற்று வரை அதாவது உலகின் 15 ஆயிரம் படங்களில் 347  இடத்திற்கு வந்துள்ளது. இந்தப்படத்தின்  எழுத்தாளர் மற்றும் இயக்குனர் பிரசாத் பிரபாகர்.... ஒரு சிறப்பு பேட்டி


முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது மக்களுக்குத்தான். ஒரு கதை சொல்லட்டுமா படத்திற்கு நீங்க அளித்துள்ள வரவேற்பிற்கு நன்றி. படம் மிகவும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது இந்த அளவுக்கு சப்போர்ட் பண்ண தற்கும்  மகிழ்ச்சியா இருக்கு இதற்கு மக்களுக்கு நன்றி.

இந்தப் படம் எடுக்க வேண்டும் என்று எப்படி உங்களுக்கு தோன்றியது?

இந்தப் படத்தின் காட்சிகளை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் ரசூல் பூக்குட்டி, ரசூல் பூக்குட்டி ஆகவே நடித்திருக்கிறார். உண்மையிலேயே 60 லிருந்து 70 சதவிகிதம் அவருக்குத் தெரியாமலேயே நான் சூட் பண்ணேன். இந்த படத்தில்  8 கே முதல் 1 டி சி வரை உள்ள 24 கேமராக்களை பயன்படுத்தி உள்ளேன். ஒரு விழாவின் ஒலிப்பதிவை பதிவு செய்யும் பணியில் இருக்கும்போது  ஒரு தடை வந்தால் அவர் என்ன செய்வார் என்பதுதான் கதை. இந்த படத்திற்கு ரீடேக் இல்லை. 64 ஏக்கர் இடத்தில், 10 லட்சம் மக்கள் ,100 யானைகள், 500 செண்டை வாத்தியம் , மக்கள் இந்த இடத்தில் நிறம், வாசம் எதுவுமே இல்லாமல் இந்த பூரம் விழா கொண்டாடுவதற்காக மக்கள் கூடுகின்றனர். இந்த  மேஜிக்கை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது சவாலாகவே இருந்தது. 

அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் 64 ஏக்கர் இடத்தில் 10 லட்சம் மக்கள் கூடுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் எனக்கூறி இந்த விழாவிற்கு 25 ஆயிரம் மக்கள் அனுமதிக்கும் நிலை பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு   நடக்க வாய்ப்புகள் உள்ளது அதுமட்டுமல்லாமல்  100 யானைகளுக்கு பதில் ஒரு அஞ்சு பத்து  யானைகள் பயன்படுத்தலாம்  செண்டை மேளம்களுக்கு பதில்  டெக்னாலஜி அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்த வாத்தியங்கள் தேவையில்லை என்ற மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நம் கலாச்சாரத்தை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இந்திய கலாச்சாரம், தமிழக கலாச்சாரம், கேரள கலாச்சாரம் என்று தனியாக இல்லை அனைத்தும் சேர்ந்ததுதான் இந்தியன் கலாச்சாரம். நமது கலாச்சாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் அந்த நோக்கத்தில்  தான் எனக்கு இப்படி ஒரு யோசனை தோன்றியது. எனக்கு மிகவும் சந்தோஷம் ஏனென்றால் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன் எந்த பின்னணியும் இல்லாமல் திரை உலகிற்கு வந்தவன். ஆனால், என்னுடைய படத்தின் இசையை சோனி மியூசிக் வாங்கியிருக்கிறது.
சாதாரணமான ஒரு கலைஞனாக வாழ்ந்து இறந்து போவதை விட மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் அதுதான் இந்த படம்


இந்த கதையை ரசூல் பூக்குட்டி இடம் என்ன சொல்லி சம்மதிக்க வைத்தார்கள்?

நான் எதுவும் சொல்லி அவரை சம்மதிக்க வைக்க வில்லை. அவரிடம் நான் சொன்னதெல்லாம் இது ஒரு டாக்குமென்டரி படம் என்றுதான். ஒரு காட்சி நாங்கள் படமாக்கினோம் அப்போது அவரிடம் நான் கூறினேன் பிபிசியில் இருந்து உங்களுக்கு போன் கால் வந்தால் எப்படி ரெஸ்பான்ஸ் செய்வீர்கள் என்ற காட்சி எடுத்தோம் ஆனால் உண்மையிலேயே அவர் நண்பர்க்கு போன் செய்து உரையாடினார் அதையே நாங்கள்  படத்தில் பயன் படுத்தினோம். 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில இடங்களில் படத்திற்கு ட்ராமா தேவைப்பட்டது. அதை அவரிடம் கூறினோம் ஆனால் அவர்  நீ என்னை ஒரு கதாநாயகனாக எடுக்க முயற்சி செய்கிறார் அது என்னுடைய தொழில் அல்ல என்று மறுத்துவிட்டார். அப்பொழுது நான் அவருடைய ஈகோவை தூண்டி விட்டேன் நீங்கள் யார் ரஜினி  அல்லது மம்முட்டி யா என்று கூறி மொக்கையாக நடிக்கிறீர்கள் என்று  தூண்டிவிட்டு தான் இந்த படத்தை எடுத்து முடித்தேன் .

நீங்கள் திருச்சூர்  சென்று பூரம் நடக்கும் இடத்திலேயே படப்பிடிப்பு நடத்தினீர்களா?

பூரம் நடக்கும் இடத்தில் தான் இதை படப்பிடிப்பு நடத்த வேண்டும் ஏனென்றால் இதற்கு செட் எல்லாம் போட முடியாது. படத்தில் ஏதாவது ஒன்று மிஸ் ஆனால் அதை எடுப்பதற்கு மீண்டும் ஓர் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது மக்கள் கூடும் பிரம்மாண்டத்தை பதிவு செய்ய ஜிம்மி ஜிப்  தேவைப்பட்டது. ஆனால், யானைகள் மிரண்டு போக வாய்ப்பு உள்ளதால் இவைகள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் என் படக்குழுவினர்கள் மிகப் பெரிய கட்டிடங்களில் அமர்ந்து இருந்து உண்ண உணவு கூட இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம்.

படத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்

செவி  இரண்டுமே விழி ஆகுமே அதுதான் படத்தின் முக்கிய கருத்து. காதுகளில் கேட்கப்படுவது தான் காட்சியாக மாறுகிறது அதனால் இந்த படத்தை பார்வையற்றவர்களுக்காக நான் சமர்ப்பித்துள்ளேன்.

பேட்டி பூஜையில் அனுப்புகிறேன்.




 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.