ETV Bharat / sitara

'ஹீரோ' படத்திற்கு வந்த புதிய சிக்கல்

author img

By

Published : Nov 14, 2019, 3:22 PM IST

Updated : Nov 14, 2019, 6:58 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Interim stay for actor Sivakarthikeyans hero movie

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருந்தது 'ஹீரோ' திரைப்படம். இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட 24 ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் 24 ஏ.எம். ஃபிலிம்ஸின் பங்குதாரர்களான ஆர்.டி. ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடமிருந்து 2018 செப்டம்பர் மாதம் 10 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தனர்.

பத்து மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறிய நிலையில் அவர்கள் இதுவரை பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து 24 ஏ.எம். ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'ஹீரோ' படத்தை, கே.ஜே.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

எனவே ஹீரோ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டியும் ஒப்பந்தத்தின்படி கடன் தொகையான 10 கோடி ரூபாயை 24 விழுக்காடு வட்டியுடன் திருப்பி வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'ஹீரோ' படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும் வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கைதி வசூல்: அண்ணன் சூர்யாவை தொடர்ந்து தம்பி கார்த்தி புதிய சாதனை!

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருந்தது 'ஹீரோ' திரைப்படம். இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட 24 ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் 24 ஏ.எம். ஃபிலிம்ஸின் பங்குதாரர்களான ஆர்.டி. ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடமிருந்து 2018 செப்டம்பர் மாதம் 10 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தனர்.

பத்து மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறிய நிலையில் அவர்கள் இதுவரை பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து 24 ஏ.எம். ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'ஹீரோ' படத்தை, கே.ஜே.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

எனவே ஹீரோ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டியும் ஒப்பந்தத்தின்படி கடன் தொகையான 10 கோடி ரூபாயை 24 விழுக்காடு வட்டியுடன் திருப்பி வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'ஹீரோ' படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும் வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கைதி வசூல்: அண்ணன் சூர்யாவை தொடர்ந்து தம்பி கார்த்தி புதிய சாதனை!

Intro:Body:நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் "ஹீரோ" படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் (Arbitration Center) உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "ஹீரோ" படம் வரும் டிசம்பர் 20 ம் வெளியிட 24பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் 24 ஏஎம் பிலிம்சின் பங்குதாரர்களான ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடம் இருந்து கடந்த 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றனர். ஆண்டுக்கு 24 சதவீதம் வட்டியுடன் 10 மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவதாக கூறிய நிலையில், இதுவரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை.

இந்நிலையில் 24ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஹீரோ படத்தை, கே.ஜி.ஆர் பிலிம் நிறுவனத்தின் மூலமாக படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே ஹீரோ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், ஒப்பந்த படி கடன் தொகை 10 கோடி ரூபாயை 24 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் டி எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவன தரப்பில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நடுவர் மையம், ஹீரோ படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும், வேறு நிறுவனங்களில் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணை டிசம்பர் 2 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Conclusion:
Last Updated : Nov 14, 2019, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.