ETV Bharat / sitara

புலி தாக்கி மாடு மேய்க்க சென்றவர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 25, 2021, 1:16 PM IST

உதகை அருகே புலி தாக்கியதில் மாடு மேய்க்க சென்றவர் உயிரிழந்தார்.

புலி
புலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவர் வழக்கம்போல் மாடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்கு பதுங்கியிருந்த புலி அவரை தாக்கியதில் தலை, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சந்திரன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த பகுதியில் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாடுகள், 4 மனிதர்களை புலி கொன்றுள்ளதால், அதனைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவர் வழக்கம்போல் மாடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்கு பதுங்கியிருந்த புலி அவரை தாக்கியதில் தலை, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி சந்திரன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த பகுதியில் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாடுகள், 4 மனிதர்களை புலி கொன்றுள்ளதால், அதனைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.