ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பின்னர், சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்தில் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படக்குழுவினரால் வெளியிடப்பட்ட 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் வால் பேப்பர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: செல்வராகவனுக்கு கரோனா தொற்று உறுதி!