'வெயில்', 'அங்காடி தெரு', 'அரவான்', 'காவியத்தலைவன்' என வித்தியாசமான படங்களை இயக்கி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் வசந்தபாலன். இவர் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்' என்னும் தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் முதல் படத்தை வசந்தபாலன் தற்போது இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், 'கைதி', 'மாஸ்டர்' படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன்தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். துஷாரா விஜயன் நாயகியாகவும், சிங்கம்புலி, பரணி, ஷா ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். ஜிவி பிராகாஷ் இசையமைக்கிறார்.
-
கொரோனாவோட போராடியாச்சு,
— Urban Boyz Studios (@UBoyzStudios) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
இப்போ ஷூட்டிங் ஸ்பாட் போராட்டம், இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்குன்னு களத்தில் இறங்கியிருக்கும் எங்கள் இயக்குநரை மறுபடியும் வசந்த காலத்திற்கு வரவேற்கிறோம்!👏#VasanthaBalansNext@Vasantabalan1 @iam_arjundas @officialdushara @gvprakash @onlynikil #ArjunDas pic.twitter.com/tDeDIJETln
">கொரோனாவோட போராடியாச்சு,
— Urban Boyz Studios (@UBoyzStudios) August 1, 2021
இப்போ ஷூட்டிங் ஸ்பாட் போராட்டம், இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்குன்னு களத்தில் இறங்கியிருக்கும் எங்கள் இயக்குநரை மறுபடியும் வசந்த காலத்திற்கு வரவேற்கிறோம்!👏#VasanthaBalansNext@Vasantabalan1 @iam_arjundas @officialdushara @gvprakash @onlynikil #ArjunDas pic.twitter.com/tDeDIJETlnகொரோனாவோட போராடியாச்சு,
— Urban Boyz Studios (@UBoyzStudios) August 1, 2021
இப்போ ஷூட்டிங் ஸ்பாட் போராட்டம், இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்குன்னு களத்தில் இறங்கியிருக்கும் எங்கள் இயக்குநரை மறுபடியும் வசந்த காலத்திற்கு வரவேற்கிறோம்!👏#VasanthaBalansNext@Vasantabalan1 @iam_arjundas @officialdushara @gvprakash @onlynikil #ArjunDas pic.twitter.com/tDeDIJETln
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இடையில் கரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. வசந்தபாலன் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிராகஷை வைத்து இயக்கியுள்ள 'ஜெயில்' படம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்குத் தயராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'நா.முத்துக்குமார் கவிதைகளை, பாடல்களாக மாற்றிக் கொடுங்க...' - வசந்தபாலன்