ETV Bharat / sitara

பிரபல நடிகையை துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்

author img

By

Published : May 27, 2019, 3:53 PM IST

பிரபல போஜ்புரி நடிகையை துப்பாக்கி முனையில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு இளைஞர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிது சிங்

போஜ்புரியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரிது சிங். இவர் தற்போது 'துலாரி பிடியா' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்கன்ச் நகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக வந்த ரிது சிங் சோன்பத்ராவில் படக்குழுவினர் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இரவு 11 மணிக்கு ரிது சிங் இருக்கும் அறைக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். துப்பாக்கியை காட்டி மிரட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு மிரட்டியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை ரிது சிங் பயத்தில் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த அசோக் என்பவர் ரிது சிங்கை காப்பாற்ற முயன்றார். அப்போது, அந்த இளைஞர் அசோக்கை பார்த்து துப்பாக்கியால் சுட்டதில் அசோக் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போஜ்புரி நடிகை ரிது சிங்
போஜ்புரி நடிகை ரிது சிங்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரிது சிங்கை மிரட்டிய இளைஞரிடம் துப்பாக்கியை ஒப்படைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். துப்பாக்கியை தரமறுத்த அந்த இளைஞர் காவல்துறையினரை பார்த்து சுட முயன்றுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் லாவகமாக பிடித்து கைது செய்து நடிகை ரிது சிங்கை மீட்டனர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் பெயர் பங்கஜ் யாதவ் என்பதும், நடிகை ரிது சிங்கை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகையை இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஜ்புரியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரிது சிங். இவர் தற்போது 'துலாரி பிடியா' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்கன்ச் நகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக வந்த ரிது சிங் சோன்பத்ராவில் படக்குழுவினர் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இரவு 11 மணிக்கு ரிது சிங் இருக்கும் அறைக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார். துப்பாக்கியை காட்டி மிரட்டி தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு மிரட்டியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை ரிது சிங் பயத்தில் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த அசோக் என்பவர் ரிது சிங்கை காப்பாற்ற முயன்றார். அப்போது, அந்த இளைஞர் அசோக்கை பார்த்து துப்பாக்கியால் சுட்டதில் அசோக் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போஜ்புரி நடிகை ரிது சிங்
போஜ்புரி நடிகை ரிது சிங்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரிது சிங்கை மிரட்டிய இளைஞரிடம் துப்பாக்கியை ஒப்படைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். துப்பாக்கியை தரமறுத்த அந்த இளைஞர் காவல்துறையினரை பார்த்து சுட முயன்றுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் லாவகமாக பிடித்து கைது செய்து நடிகை ரிது சிங்கை மீட்டனர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் பெயர் பங்கஜ் யாதவ் என்பதும், நடிகை ரிது சிங்கை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகையை இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

Andhra Pradesh: Telangana CM K Chandrasekhar Rao and his family offered prayers at Lord Balaji temple in Tirumala, today


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.