ETV Bharat / sitara

’பாலிவுட் படத்தில் நடிக்க தயார்’- ஓப்பனாக அறிவித்த பிரியாமணி!

சென்னை: நடிகை பிரியாமணி வாய்ப்பு கொடுத்தால் இந்திப் படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

author img

By

Published : May 13, 2020, 11:11 PM IST

பிரியாமணி
பிரியாமணி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவர் தேசிய விருது பெற்றார். இப்போது தெலுங்கில் ராணாவுடன், '1992' படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரியாமணி பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது, “இந்தி திரைப்படத் தயாரிப்பாளர்கள், அவர்கள் படத்திற்கு நான் பொருந்தமாக இருப்பேன் என்று நினைத்து வாய்ப்பு கொடுத்தால், அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.

இந்தி துறையில் எனது வாழ்க்கையை விரிவுபடுத்த நான் எப்போதும் எதிர்நோக்குகிறேன். இதுவரை நான் செய்து வரும் வேலைகளை நினைத்து திருப்தி அடைகிறேன்” என்று பிரியாமணி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்கரையும் விட்டுவைக்காத கரோனா பாதிப்பு!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவர் தேசிய விருது பெற்றார். இப்போது தெலுங்கில் ராணாவுடன், '1992' படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரியாமணி பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது, “இந்தி திரைப்படத் தயாரிப்பாளர்கள், அவர்கள் படத்திற்கு நான் பொருந்தமாக இருப்பேன் என்று நினைத்து வாய்ப்பு கொடுத்தால், அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.

இந்தி துறையில் எனது வாழ்க்கையை விரிவுபடுத்த நான் எப்போதும் எதிர்நோக்குகிறேன். இதுவரை நான் செய்து வரும் வேலைகளை நினைத்து திருப்தி அடைகிறேன்” என்று பிரியாமணி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்கரையும் விட்டுவைக்காத கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.