சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சில நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
மேலும் லைகா நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த பணத்தை அறக்கட்டளை மூலம் ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்கு அளிக்கப்போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த நிதியுதவி தேவி அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : 15 ஆண்டுகளாக பறவைகளின் பசியாற்றிய 'சித்ரா'