உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கரோனா வைரஸ் பாதிப்பு தெரியாமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். இவர்களை கண்காணிக்கும் பொருட்டு காவல்துறையினர் இரவு பகல் பாராது பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
They are working for us 24x7 leaving their family and kids , What I have did is really a small thing compared to their service 👍🏻 #tamilnadupolice https://t.co/Ykx7MkDSU9
— 𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝 (@actor_shirish) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">They are working for us 24x7 leaving their family and kids , What I have did is really a small thing compared to their service 👍🏻 #tamilnadupolice https://t.co/Ykx7MkDSU9
— 𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝 (@actor_shirish) March 27, 2020They are working for us 24x7 leaving their family and kids , What I have did is really a small thing compared to their service 👍🏻 #tamilnadupolice https://t.co/Ykx7MkDSU9
— 𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝 (@actor_shirish) March 27, 2020
சில தன்னார்வலர்கள் தன்னலம் கருதாமல் காவல் துறையினருக்கு முகக் கவசம், சானிடைசர் ஆகியவைகளை வழங்கிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நடிகர் 'மெட்ரோ' சிரிஷ் சென்னை காவல்துறையினருக்கு குளுக்கோஸ், பாதுகாப்பு முகமூடிகளை வழங்கியுள்ளார். இது குறித்து சிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமக்காக அவர்கள் தங்களது குடும்பம், குழந்தைகளை விட்டு இரவு பகல் பாராது பணி செய்கின்றனர். அவர்களது சேவையை பார்க்கும் போது நான் செய்தது சிறிய சேவை தான்" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலை இணையவாசிகளும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.