தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பொன்னம்பலம். கமல்,ரஜினி,விஜயகாந்த் ஆகியோர் படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் பொன்னம்பலம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நீண்டகாலமாக சிறுநீரக பிரச்னை இருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் கமல் ஹாசன் ஏற்று கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.