ETV Bharat / sitara

எனக்கும் அந்த ஆசை அதிகமாகவே இருந்தது - நடிகர் அதர்வா ஓபன் டாக்!

author img

By

Published : May 1, 2019, 10:03 AM IST

சென்னை: பிற நடிகர்களைப்போன்று தனக்குள் இருந்த ஆசை பற்றி நடிகர் அதர்வா வெளிப்படையாக பேசியுள்ளார்.

atharva

நடிகர் அதர்வா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் ‘100’. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா, யோகி பாபு, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு நடக்கும் கொடூரங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நடிகர் அதர்வா, இயக்குநர் சாம் ஆண்டன், இசையமைப்பாளர் சாம் டி எஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் அதர்வா, “பொதுவா நமக்கு ஒரு பிரச்னை வரும்போது 100க்கு தான் ஃபோன் செய்வோம். அங்கு ஃபோன் எடுத்து பேசுபவர்கள் ஆண்டவனுக்கு சமம். அவர்கள்தான் என்ன பிரச்னை என்று நம்மிடம் கேட்டு அதை ஒருங்கிணைத்து நாம் என்ன செய்யவேண்டும் என ஆறுதல் கூறுவார்கள்.

இந்த படம் கன்ட்ரோல் ரூமில் பணிபுரியும் ஆபீஸர் பற்றிய ஒரு படம். கண்டிப்பாக இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு போலீஸ் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு அந்த ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

இதுபோன்ற ஒரு படத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நகைச்சுவை படங்களை எடுத்த இயக்குநர் சாம் ஆண்டன் இதுபோன்று அதிகமான ஆக்சன் படங்களை எடுக்க வேண்டும்.

100 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள். ஒரு படத்தை சரியான தேதியில் ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்குத் தெரியும். அந்த வகையில் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படம் நல்ல பொழுதுபோக்காக அமையும்” என்றார்.

நடிகர் அதர்வா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் ‘100’. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா, யோகி பாபு, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு நடக்கும் கொடூரங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நடிகர் அதர்வா, இயக்குநர் சாம் ஆண்டன், இசையமைப்பாளர் சாம் டி எஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் அதர்வா, “பொதுவா நமக்கு ஒரு பிரச்னை வரும்போது 100க்கு தான் ஃபோன் செய்வோம். அங்கு ஃபோன் எடுத்து பேசுபவர்கள் ஆண்டவனுக்கு சமம். அவர்கள்தான் என்ன பிரச்னை என்று நம்மிடம் கேட்டு அதை ஒருங்கிணைத்து நாம் என்ன செய்யவேண்டும் என ஆறுதல் கூறுவார்கள்.

இந்த படம் கன்ட்ரோல் ரூமில் பணிபுரியும் ஆபீஸர் பற்றிய ஒரு படம். கண்டிப்பாக இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு போலீஸ் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு அந்த ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

இதுபோன்ற ஒரு படத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நகைச்சுவை படங்களை எடுத்த இயக்குநர் சாம் ஆண்டன் இதுபோன்று அதிகமான ஆக்சன் படங்களை எடுக்க வேண்டும்.

100 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள். ஒரு படத்தை சரியான தேதியில் ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்குத் தெரியும். அந்த வகையில் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படம் நல்ல பொழுதுபோக்காக அமையும்” என்றார்.

நூறு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு


நடிகர் அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம்  ‘100’. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில்  ஹன்சிகா யோகி பாபு ராதாரவி சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படத்தில் , பள்ளிச் சிறுமிகளுக்கு நடக்கும் கொடூரங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இச்சந்திப்பில் நடிகர் அதர்வா இயக்குனர் சாம் ஆண்டர்சன் இசையமைப்பாளர் சாம் டி எஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இச் சந்திப்பில் பேசிய நடிகர் அதர்வா, பொதுவா நமக்கு ஒரு பிரச்சனையும் வந்தா 100 க்கு தான் போன் செய்வோம் 100 ல் இருந்து போன் எடுத்து பேசுபவர்  ஆண்டவனுக்கு சமம். அவங்கதான்் போனை எடுத்து பேசுபவர்கள் என்ன பிரச்சனை என்று நம்மிடம் கேட்டு அதை ஒருங்கிணைத்து நாம் என்ன செய்யவேண்டும் ஆறுதல்் கூறுவது இவர்கள்தான்

கன்ட்ரோல் ரூமில் பணிபுரியும் ஆபீஸர் பற்றிய ஒரு படம்தான் நூறு கண்டிப்பா இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன் ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு போலீஸ் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் எனக்கு அந்த ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இன்னிக்கி அந்த படம் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது இதுபோன்ற ஒரு படம் நடித்து இருக்கிறோம் என்று இதற்கு நான் இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே 2 காமெடி படங்களை எடுத்துள்ளார் இப்பொழுது ஒரு போலீஸ் கதையை எடுத்துள்ளார் இன்னும் அதிகமாக ஆக்சன் படங்களை எடுக்க வேண்டும் இந்த படத்தில் பணியாற்றிய technicians எல்லாரும் அவரவர்கள் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள் ஒரு படத்தை சரியான தேதியில் ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்குத் தெரியும் அந்த வகையில் மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் குறிப்பிட்ட தேதியில் மே 9-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது கண்டிப்பா இது ஒரு என்டர்டைன்மென்ட் ஃபிலிம் ஆக இருக்கும் என்றார்

வீடியோ மோஜோவில் அனுப்பி உள்ளேன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.