ETV Bharat / sitara

சமத்துவத்தை பேசும் சந்தானத்தின் ‘ஏ1’- சந்தோஷ் நாராயணன்

சென்னை: சந்தானத்தின் ‘ஏ1’ திரைப்படம் சர்ச்சை படமல்ல, சமத்துவத்தை பேசும் படம் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 24, 2019, 11:20 AM IST

a1 movie

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள ‘ஏ1’ திரைப்படம் ஜுலை 26ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.விழாவில், ஒளிப்பதிவாளர் கோபி, ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், 'இந்த மேடையில் சந்தானம் இருப்பதால் அனைவரும் ஜாலியாகப் பேச முடியுது. 'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் வருவது குறைவு. இந்தப் படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக இருக்கும்' என்றார்

ஏ1 பட நாயகி தாரா அலிஸா பெரி
ஏ1 பட நாயகி தாரா அலிஸா பெரி

படத்தின் இயக்குநர் ஜான்சன் பேசுகையில், தயாரிப்பாளர் ராஜ் தான் என்னை சந்தானம் சாரிடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் எதிர்பார்த்த வேலையை வாங்கிவிட்டேன் என்றார்.

நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம்

இவர்களை தொடர்ந்து பேசிய சந்தானம், 'தொலைக்காட்சியில் அறிமுகமானேன், இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம்தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளராக மாறிவிட்டார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. வியாசர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு' என்று கூறினார்.

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள ‘ஏ1’ திரைப்படம் ஜுலை 26ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.விழாவில், ஒளிப்பதிவாளர் கோபி, ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், 'இந்த மேடையில் சந்தானம் இருப்பதால் அனைவரும் ஜாலியாகப் பேச முடியுது. 'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் வருவது குறைவு. இந்தப் படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக இருக்கும்' என்றார்

ஏ1 பட நாயகி தாரா அலிஸா பெரி
ஏ1 பட நாயகி தாரா அலிஸா பெரி

படத்தின் இயக்குநர் ஜான்சன் பேசுகையில், தயாரிப்பாளர் ராஜ் தான் என்னை சந்தானம் சாரிடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் எதிர்பார்த்த வேலையை வாங்கிவிட்டேன் என்றார்.

நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம்

இவர்களை தொடர்ந்து பேசிய சந்தானம், 'தொலைக்காட்சியில் அறிமுகமானேன், இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம்தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளராக மாறிவிட்டார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. வியாசர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு' என்று கூறினார்.

Intro:A1 படம் பிரம்மாண்ட வெற்றி பெறும் - நடிகர் சந்தானம்Body:சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. ஜுலை26 தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது.

விழாவில்,
ஒளிப்பதிவாளர் கோபி, ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் , இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்

இவ்விழாவில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில்,

இந்த மேடையில் சந்தானம் சார் இருக்கிறதால எல்லாராலும் ஜாலியாகப் பேச முடியுது. சூது கவ்வும் படத்திற்கு பிறகு எனக்கு மிக பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றியப் படங்கள் எப்பவாவது வரும். இந்தப்படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்து வைத்து மக்களை எண்டெர்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக படம் இருக்கும் என்றார்

கதாநாயகி தாரா அலிசா பெரி பேசுகையில்,

சந்தானம் சார் இயக்குநர் ஜான்சன் சார் மற்றும் தயாரிப்பாளர் மூவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக சந்தோஷமான அனுபவம். சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் நான் நடிச்சிருப்பது பெருமை என்றார்

இயக்குநர் ஜான்சன் பேசுகையில்,

தயாரிப்பாளர் ராஜ் தான் என்னை சந்தானம் சாரிடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். உடனே படம் துவங்கி விட்டது. புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. சந்தானம் சார் எந்தச் ஷாட் எடுத்தாலும் மானிட்டர் வந்து பார்ப்பார். நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். படத்தில் நடித்த தாரா, மாறன், மனோகர், எம்.எஸ் பாஸ்கர் சார் என எல்லோருமே படத்தை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். சந்தானம் சார் எல்லோருக்கும் நடிப்பதில் சமமான வாய்ப்பைக் கொடுப்பார். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் என்ன எதிர்பார்த்தேனோ அதை வாங்கிவிட்டேன் என்றார்.

நடிகர் சந்தானம் பேசுகையில்,

2000ல டீவில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப்படத்தின் கலரெ மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார். கேமராமேன் டெய்லி ஒரு ஜாக்ஸ் போட்டுட்டு ஹீரோ மாதிரி வருவார். என்னை ரொம்ப அழகா காமிச்சிருக்கார். லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாக காட்டும் திறமைசாலி அவர். பைட் மாஸ்டர் இனிமே இப்படித்தான் படத்துலே எனக்கு வித்தியாசமான பைட் கொடுத்தார். அதே மாதிரி இந்தப்படத்திலும் இருக்கு. ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார்.

Conclusion:படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.