மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில உழவர்கள் ’டெல்லி சலோ’ போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
நவம்பர் மாதம் 26ஆம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கியபோது விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, உழவர்களை விரட்ட முயன்று அது முடியாமல்போகவே காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
எனினும், டெல்லிக்குச் செல்வதில் உழவர்கள் உறுதியாக இருந்த நிலையில், உழவர்கள் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல் துறை அனுமதி அளித்திருந்தது. இதனிடையே, இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஐந்து கட்டமாக நடைபெற் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, உழவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதனையடுத்து உழவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரை பிரபலங்களும் தங்ளது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (டிசம்பர் 8) நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
My heart goes out 2the farmers & their families protesting in the cold in this pandemic.They are the soldiers of the soil that keep our country going.I sincerely hope the talks between the farmers & govt yield positive results soon & all is resolved. #Farmerprotests #Rabrakha 🙏 pic.twitter.com/b7eW8p8N3P
— Preity G Zinta (@realpreityzinta) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My heart goes out 2the farmers & their families protesting in the cold in this pandemic.They are the soldiers of the soil that keep our country going.I sincerely hope the talks between the farmers & govt yield positive results soon & all is resolved. #Farmerprotests #Rabrakha 🙏 pic.twitter.com/b7eW8p8N3P
— Preity G Zinta (@realpreityzinta) December 6, 2020My heart goes out 2the farmers & their families protesting in the cold in this pandemic.They are the soldiers of the soil that keep our country going.I sincerely hope the talks between the farmers & govt yield positive results soon & all is resolved. #Farmerprotests #Rabrakha 🙏 pic.twitter.com/b7eW8p8N3P
— Preity G Zinta (@realpreityzinta) December 6, 2020
இந்தநிலையில், நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தக் குளிரிலும் தொற்றுநோய்க்கும் நடுவிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உழவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எனது அன்பு என்றும் உண்டு.
நமது தேசத்தை இயங்க வைத்துக்கொண்டிருக்கும் நமது மண்ணின் போர் வீரர்கள் அவர்கள். அரசுக்கும் உழவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவை எட்டி பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.