நடிகர் ஹிருத்திக் ரோஷன் 'க்ரிஷ்' என்னும் சூப்பர் ஹீரோ படவரிசையில் நடித்து பெரும் வெற்றி பெற்றார். இந்தப் படத்தை அவரது தந்தை ராகேஷ் ரோஷன் தயாரித்து இயக்கினார். இந்தப் படத்தை தொடர்ந்து இறங்கிய மற்ற இரண்டு படங்களும் நல்ல ஹிட் கொடுத்தன.
தற்போது 'க்ரிஷ் 4' எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஹிருத்திக் ரோஷன் நாயகன் - வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், க்ரிஷ் படத்தில் நடித்த ஜாதூவுடன் மீண்டும் இணைய உள்ளார்.
இது குறித்து தயாரிப்பு குழு வட்டராங்கள் தெரிவிக்கையில், 'க்ரிஷ் 4' திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 'க்ரிஷ் 3' இல் ரோஹித் மெஹ்ரா (ஹிருத்திக் ரோஷன்) இறந்து விடுகிறார். இதனையடுத்து 'க்ரிஷ்' தனது சக்தியை பயன்படுத்தி ஏலியானா ஜாடூவை மீண்டும் திரையில் கொண்டு வருகிறார்.
ராகேஷ், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் ஸ்கிரிப்ட்டில் விரிவாக பணியாற்றி வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள், பிற தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து வெளிநாட்டு நிபுணர்களுடன் கலந்துரையாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் அளித்த நேர்காணலில், தனது தந்தையின் உடல் நிலை மோசமாக இருப்பதால் 'க்ரிஷ் 4' குறித்த விவாதத்தை தள்ளிவைத்துள்ளோம். இப்போது அவர் குணமடைந்து விட்டதால் மீண்டும் 'க்ரிஷ் 4' படத்தின் பணிகளை தொடங்கியுள்ளோம் என்றார்.
'க்ரிஷ் 3' வசூலில் உலகளவில் ரூ. 290 கோடியைத் தாண்டி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது.
இதையும் படிங்க: ''நான் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவன் - ஹிருத்திக் ரோஷன்