ETV Bharat / sitara

கொரோனா வைரஸ் பீதி: ஃபேஷன் ஷோவை ரத்துசெய்த தீபிகா

author img

By

Published : Mar 3, 2020, 1:40 PM IST

உலக அளவில் புகழ்பெற்ற ஃபேஷன் நிறுவனத்தின் போட்டோஷுட்டில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை என்று பெருமையை பெற்ற தீபிகா படுகோனே, கொரோனா வைரஸ் பீதியால் அந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளார்.

Deepika cancels Paris Fashion Week trip
Actress Deepika Padukone

மும்பை: கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக தற்போது பங்கேற்கவிருந்த பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியை நடிகை தீபிகா படுகோனே ஒத்திவைத்தார்.

ஃபிரான்ஸில் இயங்கிவரும் பிரபல ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் உய்ட்டனின் பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி இன்று (மார்ச் 3) நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காகப் பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்த தீபிகா, கொரோனா வைரஸ் பீதி காரணமாக தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார். இது தொடர்பாக அவரது செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் சர்வதேச பரப்புரை ஒன்றில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றவர் தீபிகா. இதையடுத்து தங்களது பரப்புரைக்காக எடுத்துக்கொண்ட கருப்பொருளை வைத்து போட்டோஷுட் செய்த இந்த நிறுவனம், அந்தப் புகைப்படங்களை வெளியிட்டது. இதில் தீபிகாவின் புகைப்படமும் இடம்பிடித்திருந்தது.

இந்தப் புகைப்படங்களை தீபிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அவருக்குப் பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.

இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தின் புகழ்மிக்க ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் தற்போது தவிர்க்க முடியாது சூழ்நிலையில் பங்கேற்காமல் உள்ளார்.

தீபிகா தனது காதல் கணவர் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்த '83' திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார். இந்தப் படம் 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பை வென்ற கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.

இதேபோல் ஹாலிவுட் நகைச்சுவைத் திரைப்படமான தி இன்டெர்ன் இந்தி ரீமேக்கில் ரிஷி கபூருடன் இணைந்து நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: பிரான்ஸ் ஃபேஷன் நிறுவனத்தின் பரப்புரையில் இணைந்த முதல் இந்திய பிரபலம் தீபிகா!

மும்பை: கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக தற்போது பங்கேற்கவிருந்த பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியை நடிகை தீபிகா படுகோனே ஒத்திவைத்தார்.

ஃபிரான்ஸில் இயங்கிவரும் பிரபல ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் உய்ட்டனின் பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சிக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி இன்று (மார்ச் 3) நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காகப் பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்த தீபிகா, கொரோனா வைரஸ் பீதி காரணமாக தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார். இது தொடர்பாக அவரது செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் சர்வதேச பரப்புரை ஒன்றில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றவர் தீபிகா. இதையடுத்து தங்களது பரப்புரைக்காக எடுத்துக்கொண்ட கருப்பொருளை வைத்து போட்டோஷுட் செய்த இந்த நிறுவனம், அந்தப் புகைப்படங்களை வெளியிட்டது. இதில் தீபிகாவின் புகைப்படமும் இடம்பிடித்திருந்தது.

இந்தப் புகைப்படங்களை தீபிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அவருக்குப் பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.

இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்தின் புகழ்மிக்க ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் தற்போது தவிர்க்க முடியாது சூழ்நிலையில் பங்கேற்காமல் உள்ளார்.

தீபிகா தனது காதல் கணவர் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்த '83' திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார். இந்தப் படம் 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பை வென்ற கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.

இதேபோல் ஹாலிவுட் நகைச்சுவைத் திரைப்படமான தி இன்டெர்ன் இந்தி ரீமேக்கில் ரிஷி கபூருடன் இணைந்து நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: பிரான்ஸ் ஃபேஷன் நிறுவனத்தின் பரப்புரையில் இணைந்த முதல் இந்திய பிரபலம் தீபிகா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.