ETV Bharat / sitara

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கத்ரீனா சொல்லும் ஐடியாக்கள்

author img

By

Published : Mar 16, 2020, 11:32 AM IST

கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துமாறு ரசிகர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்

COVID-19: Katrina Kaif urges all to follow precautionary safety measures
Actress Katrina kaif

மும்பை: உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளும் யோசனைகளை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் நடிகை கத்ரீனா கைஃப்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, அனைவரும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி, தியானம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். எனவே இவற்றை தவறாமல் கடைபிடியுங்கள். உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு சந்தாஷமாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன், தனது தோழிகளோடு சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார் கத்ரீனா.

மார்ச் 15ஆம் தேதிவரை இந்தியாவில் 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கத்ரீனாவைப் போல் பாலிவுட் நடிகைகள் பலரும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் விழப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

ஆக்‌ஷன் திரில்லர் பாணியல் உருவாகியிருக்கும் சூர்யவன்ஷி பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருந்தார் நடிகை கத்ரீனா. படம் மார்ச் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது.

இதையும் படிங்க: 'சூர்யவன்ஷி' படப்பிடிப்புக்கிடையே படப்பிடிப்புத் தளத்தை சுத்தம் செய்த கத்ரீனா

மும்பை: உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளும் யோசனைகளை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் நடிகை கத்ரீனா கைஃப்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, அனைவரும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி, தியானம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். எனவே இவற்றை தவறாமல் கடைபிடியுங்கள். உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு சந்தாஷமாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன், தனது தோழிகளோடு சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார் கத்ரீனா.

மார்ச் 15ஆம் தேதிவரை இந்தியாவில் 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கத்ரீனாவைப் போல் பாலிவுட் நடிகைகள் பலரும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் விழப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

ஆக்‌ஷன் திரில்லர் பாணியல் உருவாகியிருக்கும் சூர்யவன்ஷி பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருந்தார் நடிகை கத்ரீனா. படம் மார்ச் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது.

இதையும் படிங்க: 'சூர்யவன்ஷி' படப்பிடிப்புக்கிடையே படப்பிடிப்புத் தளத்தை சுத்தம் செய்த கத்ரீனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.