ETV Bharat / opinion

கரோனா காலத்தில் பரவும் இஸ்லாமிய வெறுப்புவாத நோய்!

author img

By

Published : May 3, 2020, 1:02 PM IST

கோவிட்-19 பரவலுக்கு எதிராக நாடே போராடிவரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வெறுப்புவாத கருத்துகள் பரப்பப்பட்டுவருகிறது. இதுபோன்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

RSS chief Mohan Bhagwat
RSS chief Mohan Bhagwat

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் 14 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே இறுதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கால் வைரஸ் பரவல் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த ஊரடங்கு காலத்தில் வைரசுக்கு எதிரா ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

கோவிட்-19 பரவலுக்கு எதிராக நாம் போராடிவரும் அதேநேரத்தில் இந்திய அரசியலில் இஸ்லாமிய வெறுப்புவாதத்தைப் பரப்பும் மற்றொரு சக்திவாய்ந்த வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தக் கொடூர வைரசை முறையாகக் கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் 130 கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் இந்த வைரஸ் பெரும் அபாயமாக உருவாகும்.

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் புறக்கணித்து டெல்லி நிஜாமுதீனில் நடத்தப்பட்ட சமய மாநாடு இந்த இஸ்லாமிய வெறுப்புவாதக் கருத்துகளுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த சமய மாநாடு மூலம் நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும். இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

ஆனால் இந்தியாவில் கரோனா ஜிகாத் நடத்தப்படுவதாக இந்த விஷயத்தைப் பொதுமக்களின் மனதில் நஞ்சாக சில ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பினர். இதனால் பொதுமக்கள் இஸ்லாமிய தெரு வியாபாரிகள், காய்கறி விற்பனை செய்பவர்களை மிரட்டும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சில இஸ்லாமிய வெறுப்புவாத செயல்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் (எம்எல்ஏ) ஈடுபட்டனர்.

நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைத்துத் தாக்கும் நடைமுறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் இவற்றைக் குறைக்கும் செயல்களில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி தொலைக்காட்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நாடே கோவிட்-19 பரவலுக்கு எதிராகப் போராடிவரும் இந்தச் சூழ்நிலையில் ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தையே குற்றம் சுமத்துவது சரியான நடைமுறை அல்ல என்று எச்சரித்தார். மேலும், கோபத்திலோ பயத்திலோ யாராவது ஏதாவது தவறு செய்தால், அதற்கு நம்மால் ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வாரம் (ஏப்ரல் 19) பிரதமர் நரேந்திர மோடி, கரோனாவால் உருவாகியுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்க அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 தொற்று இனம், மதம், நிறம், சாதி, மொழி, எல்லைகள் என்று எதையும் பார்ப்பதில்லை. இதை எதிர்கொள்ள ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் நாம் இணைய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், முக்கியமாக நாட்டின் எதிர்காலம் பொதுமக்களின் ஒற்றுமையிலேயே உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆனால் பிரதமர் மோடி, மோகன் பகவத் என இருவரின் வேண்டுகோளும் சமூகத்தில் எவ்வித குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏப்ரல் இறுதியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள், இஸ்லாமியர்களின் கடைகளிலிருந்து பொருள்களை வாங்க வேண்டாம் என்றும், அவர்களை குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்க வேண்டாம் என்றும் சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்திருந்தனர். இவர்கள் மூலம் கோவிட்-19 வைரஸ் எளிதில் பரவுவதாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்தச் சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளிக்கக் கோரி இரு எம்எல்ஏ-களுக்கும் பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்ற சமூகத்தைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை பாஜகவினர் கூறுவதைத் தடுக்கத் தவறிய உள்ளூர் தலைவர்களையும் பாஜக தலைவர் ஜே பி நாட்டா கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த தேவையற்ற கருத்துக்கள் மூலம் இந்தியாவின் மதிப்பிற்குச் சர்வதேச அளவில் களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்புவாதக் கருத்துக்களுக்கு வெளிநாடுகளிலிருந்தும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிய வெறுப்புவாதப் பரப்புரைகளைத் தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்தின் இளவரசி ஹென்ட் அல்-காசிமி யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஐக்கிய அமீரகத்திலேயே பணிபுரிந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வெறுப்புவாதக் கருத்துகளைப் பரப்பும் ஒரு இந்தியருக்கு எதிராக தனது கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்.

மேலும், மகாத்மா காந்தியின் மண்ணிலிருந்து பரப்பப்படும் கருத்துகள் குறித்துத் தான் ஏமாற்றமடைவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் என்ன நடக்கிறது? மிகவும் அமைதியான மதங்களில் இந்து மதமும் ஒன்று. ஏன் இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதங்களைவிட அதிகமாகவே அதில் அமைதி போதிக்கப்பட்டிருக்கலாம்" என்று பதிவிட்டார்.

பாஜக 2019ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றதிலிருந்து, சிறுபான்மையினரை முறையாக நடத்துவதில் சிக்கல் உள்ள நாடாக இந்தியாவை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும், அதன் சில முடிவுகளில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், இந்தியா இந்த அமைப்பின் அறிக்கையை நிராகரித்து அவற்றை "பக்கச் சார்புடையது" என்றும் இந்த அறிக்கை தற்போதுள்ள நிலையைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இந்தியா மீதிருக்கும் மதிப்பையும் உள்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் நம்மால் தனியாகப் பிரிக்க முடியாது. சர்வதேச அளவில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க மோடியும் மோகன் பகவத்தும் வலியுறுத்தியதைப் போல நாட்டில் உண்மையான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நாம் வளர்க்க வேண்டும்.

சமூகம் குறித்தும், கோவிட்-19 குறித்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உட்சபட்ச தலைவர்கள் என்ன கருத்துகளை வெளிப்படுத்துகிறார்களோ அதை அந்த அமைப்பின் உறுப்பினர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவிய இஸ்லாமிய ஹீரோக்கள்: அலுவலருக்கு நோட்டீஸ்!

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் 14 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே இறுதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கால் வைரஸ் பரவல் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த ஊரடங்கு காலத்தில் வைரசுக்கு எதிரா ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

கோவிட்-19 பரவலுக்கு எதிராக நாம் போராடிவரும் அதேநேரத்தில் இந்திய அரசியலில் இஸ்லாமிய வெறுப்புவாதத்தைப் பரப்பும் மற்றொரு சக்திவாய்ந்த வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தக் கொடூர வைரசை முறையாகக் கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் 130 கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் இந்த வைரஸ் பெரும் அபாயமாக உருவாகும்.

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் புறக்கணித்து டெல்லி நிஜாமுதீனில் நடத்தப்பட்ட சமய மாநாடு இந்த இஸ்லாமிய வெறுப்புவாதக் கருத்துகளுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த சமய மாநாடு மூலம் நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதை அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும். இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

ஆனால் இந்தியாவில் கரோனா ஜிகாத் நடத்தப்படுவதாக இந்த விஷயத்தைப் பொதுமக்களின் மனதில் நஞ்சாக சில ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பினர். இதனால் பொதுமக்கள் இஸ்லாமிய தெரு வியாபாரிகள், காய்கறி விற்பனை செய்பவர்களை மிரட்டும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சில இஸ்லாமிய வெறுப்புவாத செயல்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் (எம்எல்ஏ) ஈடுபட்டனர்.

நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைத்துத் தாக்கும் நடைமுறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் இவற்றைக் குறைக்கும் செயல்களில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி தொலைக்காட்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நாடே கோவிட்-19 பரவலுக்கு எதிராகப் போராடிவரும் இந்தச் சூழ்நிலையில் ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தையே குற்றம் சுமத்துவது சரியான நடைமுறை அல்ல என்று எச்சரித்தார். மேலும், கோபத்திலோ பயத்திலோ யாராவது ஏதாவது தவறு செய்தால், அதற்கு நம்மால் ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வாரம் (ஏப்ரல் 19) பிரதமர் நரேந்திர மோடி, கரோனாவால் உருவாகியுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்க அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 தொற்று இனம், மதம், நிறம், சாதி, மொழி, எல்லைகள் என்று எதையும் பார்ப்பதில்லை. இதை எதிர்கொள்ள ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் நாம் இணைய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், முக்கியமாக நாட்டின் எதிர்காலம் பொதுமக்களின் ஒற்றுமையிலேயே உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆனால் பிரதமர் மோடி, மோகன் பகவத் என இருவரின் வேண்டுகோளும் சமூகத்தில் எவ்வித குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏப்ரல் இறுதியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள், இஸ்லாமியர்களின் கடைகளிலிருந்து பொருள்களை வாங்க வேண்டாம் என்றும், அவர்களை குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்க வேண்டாம் என்றும் சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்திருந்தனர். இவர்கள் மூலம் கோவிட்-19 வைரஸ் எளிதில் பரவுவதாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்தச் சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளிக்கக் கோரி இரு எம்எல்ஏ-களுக்கும் பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்ற சமூகத்தைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை பாஜகவினர் கூறுவதைத் தடுக்கத் தவறிய உள்ளூர் தலைவர்களையும் பாஜக தலைவர் ஜே பி நாட்டா கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த தேவையற்ற கருத்துக்கள் மூலம் இந்தியாவின் மதிப்பிற்குச் சர்வதேச அளவில் களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்புவாதக் கருத்துக்களுக்கு வெளிநாடுகளிலிருந்தும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிய வெறுப்புவாதப் பரப்புரைகளைத் தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்தின் இளவரசி ஹென்ட் அல்-காசிமி யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஐக்கிய அமீரகத்திலேயே பணிபுரிந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வெறுப்புவாதக் கருத்துகளைப் பரப்பும் ஒரு இந்தியருக்கு எதிராக தனது கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்.

மேலும், மகாத்மா காந்தியின் மண்ணிலிருந்து பரப்பப்படும் கருத்துகள் குறித்துத் தான் ஏமாற்றமடைவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் என்ன நடக்கிறது? மிகவும் அமைதியான மதங்களில் இந்து மதமும் ஒன்று. ஏன் இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதங்களைவிட அதிகமாகவே அதில் அமைதி போதிக்கப்பட்டிருக்கலாம்" என்று பதிவிட்டார்.

பாஜக 2019ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றதிலிருந்து, சிறுபான்மையினரை முறையாக நடத்துவதில் சிக்கல் உள்ள நாடாக இந்தியாவை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும், அதன் சில முடிவுகளில் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், இந்தியா இந்த அமைப்பின் அறிக்கையை நிராகரித்து அவற்றை "பக்கச் சார்புடையது" என்றும் இந்த அறிக்கை தற்போதுள்ள நிலையைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இந்தியா மீதிருக்கும் மதிப்பையும் உள்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் நம்மால் தனியாகப் பிரிக்க முடியாது. சர்வதேச அளவில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க மோடியும் மோகன் பகவத்தும் வலியுறுத்தியதைப் போல நாட்டில் உண்மையான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நாம் வளர்க்க வேண்டும்.

சமூகம் குறித்தும், கோவிட்-19 குறித்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உட்சபட்ச தலைவர்கள் என்ன கருத்துகளை வெளிப்படுத்துகிறார்களோ அதை அந்த அமைப்பின் உறுப்பினர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவிய இஸ்லாமிய ஹீரோக்கள்: அலுவலருக்கு நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.