ETV Bharat / jagte-raho

நகைகளைத் திருடி சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிச்சென்ற திருடர்கள்

author img

By

Published : Jan 29, 2020, 1:45 PM IST

சென்னை: வளசரவாக்கத்தில் கட்டுமானத் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 90 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

theft
theft

வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டுமானத் தொழில் செய்துவரும் இவர், குடும்பத்துடன் நேற்றிரவு உணவகத்திற்குச் சென்றுள்ளார். பின்னர், நள்ளிரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், வீட்டின் உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அப்போது பீரோவில் வைத்திருந்த 90 சவரனுக்கு மேல் தங்க நகைகள் திருடுபோயிருந்தன. இதனையடுத்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நகைகளை திருடி சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் திருடிச்சென்ற கொள்ளையர்கள்

ஆறுமுகம் வசித்துவந்த சொகுசு பங்களாவில் கண்காணிப்புக் கேமரா இருந்தும், திருடர்கள் சாமர்த்தியமாகக் கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல் திருடர்கள் நுழைந்தபோது காவலுக்கு இருந்த நாய் நீண்ட நேரமாக குரைத்துள்ளது. ஆனால், அதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பொருட்படுத்தாததால், வீட்டிலிருந்த நகைகளைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: காரில் கடத்தப்பட்டவர் புதுவையில் மீட்பு - காவல்துறை நடவடிக்கை

வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டுமானத் தொழில் செய்துவரும் இவர், குடும்பத்துடன் நேற்றிரவு உணவகத்திற்குச் சென்றுள்ளார். பின்னர், நள்ளிரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், வீட்டின் உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அப்போது பீரோவில் வைத்திருந்த 90 சவரனுக்கு மேல் தங்க நகைகள் திருடுபோயிருந்தன. இதனையடுத்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நகைகளை திருடி சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் திருடிச்சென்ற கொள்ளையர்கள்

ஆறுமுகம் வசித்துவந்த சொகுசு பங்களாவில் கண்காணிப்புக் கேமரா இருந்தும், திருடர்கள் சாமர்த்தியமாகக் கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல் திருடர்கள் நுழைந்தபோது காவலுக்கு இருந்த நாய் நீண்ட நேரமாக குரைத்துள்ளது. ஆனால், அதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பொருட்படுத்தாததால், வீட்டிலிருந்த நகைகளைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: காரில் கடத்தப்பட்டவர் புதுவையில் மீட்பு - காவல்துறை நடவடிக்கை

Intro:சென்னை வளசரவாக்கத்தில் கட்டுமான தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 90 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர்Body:சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டுமான தொழில் செய்து வரும் இவர் குடும்பத்துடன் நேற்று இரவு உணவகத்திற்கு சென்றுள்ளார். பின்பு நள்ளிரவு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 90 சவரனுக்கு மேல் தங்க நகையை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஆறுமுகம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். Conclusion:ஆறுமுகம் வசித்து வந்த சொகுசு பங்களாவில் கண்காணிப்பு கேமரா இருந்தும் கொள்ளையர்கள் சாமர்த்தியமாக காவல்துறையிடம் சிக்காமல் இருக்க கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கை திருடிச் சென்றனர். அதேபோல் வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்தபோது காவலுக்கு இருந்த நாய் நீண்ட நேரமாக குறித்து வந்துள்ளது ஆனால் அதனை அக்கம்பக்கத்தினர் பொருட்படுத்தாது கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.