ETV Bharat / jagte-raho

சாத்தூர் தண்டவாளத்தில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

விருதுநகர்: சாத்தூரில், ரயில் தண்டவாளத்தில் ராமு என்பவரின் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலையா எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Sep 28, 2019, 10:55 PM IST

Unknown body on railway track


விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலுள்ள, உப்பு ஓடைப்பாலத்தின் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில், 27 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து காவல் துறையினர் விரைந்துசென்று சோதனையிட்டு சடலத்தைக் கைப்பற்றினர்.

மேலும் சடலத்தின் அருகே, உடைந்து கிடந்த செல்போனிலிருந்த சிம்கார்டை, மற்றொரு மொபைல் ஃபோனில் போட்டு, அதிலிருந்த நம்பருக்கு அழைத்து காவல் துறையினர் விசாரித்ததில், இறந்தவர் முத்தார்ப்பட்டியைச் சேர்ந்த அழகன் என்பவரது மகன் ராமு என்று தெரியவந்தது.

இவர் சென்னையில் ஒரு பேக்கரியில் வேலைசெய்து வருகிறார் என்றும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு, மீண்டும் காலையில் சென்னைக்கு கிளம்பினார் என்றும் தெரியவந்தது.

ஆனால் அவரது பையில் டிக்கெட் ஏதும் இல்லாததால், ரயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்தாரா, அல்லது கொலை அல்லது தற்கொலையா என்று ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராமுவின் சடலத்தைக் கைப்பற்றி, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

Unknown body Viruthunagar

இதையும் படிங்க:

’குளிக்க காசு வாங்குனாலும் வசதி செய்து கொடுக்க மாட்றாங்க’


விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலுள்ள, உப்பு ஓடைப்பாலத்தின் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில், 27 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து காவல் துறையினர் விரைந்துசென்று சோதனையிட்டு சடலத்தைக் கைப்பற்றினர்.

மேலும் சடலத்தின் அருகே, உடைந்து கிடந்த செல்போனிலிருந்த சிம்கார்டை, மற்றொரு மொபைல் ஃபோனில் போட்டு, அதிலிருந்த நம்பருக்கு அழைத்து காவல் துறையினர் விசாரித்ததில், இறந்தவர் முத்தார்ப்பட்டியைச் சேர்ந்த அழகன் என்பவரது மகன் ராமு என்று தெரியவந்தது.

இவர் சென்னையில் ஒரு பேக்கரியில் வேலைசெய்து வருகிறார் என்றும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு, மீண்டும் காலையில் சென்னைக்கு கிளம்பினார் என்றும் தெரியவந்தது.

ஆனால் அவரது பையில் டிக்கெட் ஏதும் இல்லாததால், ரயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்தாரா, அல்லது கொலை அல்லது தற்கொலையா என்று ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராமுவின் சடலத்தைக் கைப்பற்றி, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

Unknown body Viruthunagar

இதையும் படிங்க:

’குளிக்க காசு வாங்குனாலும் வசதி செய்து கொடுக்க மாட்றாங்க’

Intro:விருதுநகர்
28-09-19

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

Tn_vnr_04_unknown_body_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கண்டெடுப்பு தவறி விழுந்தாரா தற்கொலையா என போலீஸ் விசாரணை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரயில் தண்டவாளத்தில் உப்பு ஓடை பாலத்தின் அருகே 27 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது அதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து சோதனை செய்து பார்த்த போது ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது அதனருகில் செல்போன் உடைந்து கிடந்தது அதிலிருந்த சிம் கார்டை மற்றொடு மொபைல் போனில் போட்டு அதிலிருந்த நம்பருக்கு போன் செய்து விசாரணை செய்ததில் இவர் முத்தார் பட்டியை சேர்ந்த அழகன் என்பவரது மகன் ராமு வயது 27 இவர் சென்னையில் பேக்கரியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு மீண்டும் காலையில் சென்னைக்கு வேலைக்கு கிளம்பி விட்டதாக வீட்டினர் தகவல் கொடுத்தனர். ஆனால் அவரது பையில் டிக்கெட் ஏதும் இல்லை. ரயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்தாரா, கொலை அல்லது தற்கொலையா என்று ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் சடலத்தை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.