ETV Bharat / jagte-raho

அண்ணா நகர் கொள்ளை சம்பவம்: திருவாரூர் முருகனுக்கு காவல் நீட்டிப்பு!

author img

By

Published : Feb 5, 2020, 10:57 AM IST

சென்னை: அண்ணா நகரில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் திருவாரூர் முருகன் என்பவருக்கு ஒரு வார காலம் போலீஸ் காவல் நீட்டிப்பு வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா நகர் கொள்ளை சம்பவம்: திருவாரூர் முருகனுக்கு காவல் நீட்டிப்பு!
அண்ணா நகர் கொள்ளை சம்பவம்: திருவாரூர் முருகனுக்கு காவல் நீட்டிப்பு!


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உட்பட 400 வழக்குகள் திருவாரூர் முருகன் என்பவர், அவரது கூட்டாளிகள் மீது நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த வருடம் திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையை துளையிட்டு சுமார் 28 கிலோ நகை வரை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின்னர் பெங்களூரு காவல் நிலையத்தில் திருவாரூர் முருகன் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததால், பெங்களூரு காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த திருடுபோன நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் திருச்சி ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக திருச்சி காவல் துறையினர் காவலில் எடுத்து சில நாட்கள் விசாரித்தனர்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு அண்ணா நகரில் உள்ள வீடுகளில் புகுந்து சுமார் 100க்கும் மேற்பட்ட சவரன் நகைகளை கொள்ளையடித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் தலைமறைவாகி இருந்து வந்தார். இதனால் தற்போது அண்ணா நகர் காவல் துறையினர் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது கொள்ளையடித்த நகைகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் மீண்டும் காவலில் எடுத்து திருவாரூர் முருகனை விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த ஐந்தாவது குற்றவியல் நீதிபதி ஒரு வார காலம் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு அளித்துள்ளார்.


இதையும் படிங்க...போலி நகை வைத்து வங்கி ஊழியர் ரூ. 45 லட்சம் மோசடி ?


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உட்பட 400 வழக்குகள் திருவாரூர் முருகன் என்பவர், அவரது கூட்டாளிகள் மீது நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த வருடம் திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையை துளையிட்டு சுமார் 28 கிலோ நகை வரை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின்னர் பெங்களூரு காவல் நிலையத்தில் திருவாரூர் முருகன் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததால், பெங்களூரு காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த திருடுபோன நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் திருச்சி ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக திருச்சி காவல் துறையினர் காவலில் எடுத்து சில நாட்கள் விசாரித்தனர்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு அண்ணா நகரில் உள்ள வீடுகளில் புகுந்து சுமார் 100க்கும் மேற்பட்ட சவரன் நகைகளை கொள்ளையடித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் தலைமறைவாகி இருந்து வந்தார். இதனால் தற்போது அண்ணா நகர் காவல் துறையினர் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது கொள்ளையடித்த நகைகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் மீண்டும் காவலில் எடுத்து திருவாரூர் முருகனை விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த ஐந்தாவது குற்றவியல் நீதிபதி ஒரு வார காலம் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு அளித்துள்ளார்.


இதையும் படிங்க...போலி நகை வைத்து வங்கி ஊழியர் ரூ. 45 லட்சம் மோசடி ?

Intro:Body:அண்ணா நகரில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் திருவாரூர் முருகனுக்கு ஒரு வார காலம் போலீஸ் காவல் நீட்டிப்பு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடக, கேரளா ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உட்பட 400 வழக்குகள் திருவாரூர் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையை துளையிட்டு சுமார் 28கிலோ நகை வரை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின்னர் பெங்களூரு காவல் நிலையத்தில் திருவாரூர் முருகன் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததால் பெங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.அப்போது காட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த திருடுபோன நகைகளை போலீசார் கைப்பற்றினர்.பின்னர் திருச்சி ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக திருச்சி போலீசார் காவலில் எடுத்து சில நாட்கள் விசாரித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் அண்ணா நகரில் உள்ள வீடுகளில் புகுந்து சுமார் 100க்கும் மேற்பட்ட சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் தலைமறைவாகி இருந்து வந்தார்.இதனால் தற்போது அண்ணா நகர் போலீசார் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.அப்போது கொள்ளையடித்த நகைகளை பற்றிய எந்த விதமான துப்பும் கிடைக்காததால் மீண்டும் காவலில் எடுத்து திருவாரூர் முருகனை விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கை விசாரித்த 5வது குற்றவியல் நீதிபதி ஒரு வார காலம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு அளித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.