டெல்லி பிதம்புரா பகுதியில் ரிலையன்ஸ் நகை கடை ஒன்று செயல்ப்பட்டுவருகிறது. இந்த கடைக்குள் நேற்றிரவு 09:30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர்.
இதனையடுத்து, பாதுகாவலரை அந்த நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். பின்னர், கடையிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் போகும்போது, கடையிலிருந்த கேமராவை சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...தமிழரும் ஜல்லிக்கட்டும்- வீரம் செறிந்த காதல் கதை!