ETV Bharat / jagte-raho

மின் மாற்றியில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Jan 26, 2021, 5:02 AM IST

அவிநாசி அருகே மின் மாற்றியில் சிக்கி உயிரிழந்த வடமாநில இளைஞரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்மாற்றியில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு
மின்மாற்றியில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. அதில் இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடப்பதாக அவிநாசி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஆய்வு செய்து, மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர், ஜார்கண்ட் மாநிலம் தனியாபாத் பகுதியை சேர்ந்த கே. லட்சுமணன் சிங் (28) என்பதும், கோவை சூலூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தங்கி பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, லட்சுமணன் சிங் சூலூரிலிருந்து எதற்காக அவிநாசி வந்தார், மின்மாற்றியில் எவ்வாறு சிக்கினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரித்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: வழக்குப் பதிந்த காவல்துறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. அதில் இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடப்பதாக அவிநாசி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஆய்வு செய்து, மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர், ஜார்கண்ட் மாநிலம் தனியாபாத் பகுதியை சேர்ந்த கே. லட்சுமணன் சிங் (28) என்பதும், கோவை சூலூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தங்கி பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, லட்சுமணன் சிங் சூலூரிலிருந்து எதற்காக அவிநாசி வந்தார், மின்மாற்றியில் எவ்வாறு சிக்கினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரித்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: வழக்குப் பதிந்த காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.