ETV Bharat / jagte-raho

போதை மாத்திரை கேட்டு மருந்தக உரிமையாளருக்கு அடி!

author img

By

Published : Feb 4, 2021, 2:38 PM IST

Updated : Feb 4, 2021, 2:57 PM IST

சென்னை: போதை மாத்திரை தராததால் மருந்தக உரிமையாளரை தாக்கிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

போதைக்கு மாத்திரை தராததால் மருந்தக உரிமையாளருக்கு அடி உதை
போதைக்கு மாத்திரை தராததால் மருந்தக உரிமையாளருக்கு அடி உதை

சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரியில் சாய்ராம் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தினேஷ் குமார்(28). இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர் போதைக்காக சில மாத்திரைகளை மருந்துச் சீட்டு இல்லாமலும், இலவசமாகவும் கேட்டுள்ளார். அப்போது மருந்தக உரிமையாளர் போதைக்கு மாத்திரையை தர முடியாது கூறியுள்ளார்.

இதனால் கோபத்தில் சென்ற அந்த நபர், அவரது நண்பரை அழைத்து வந்து மருந்தக உரிமையாளரை அடையாளம் காட்டிவிட்டு சென்றுள்ளார். அவரும் மருந்தக உரிமையாளரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி, இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை பிடித்து தாம்பரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் மருந்தக உரிமையாளரை தாக்கியது பம்மல் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற கோபி நாத்(25) என்பதும், இவரது நண்பர் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த பரத் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த மருந்தகத்தில் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதாகவும் அதன் காரணமாகவே பரத் என்பவர் போதைக்காக மாத்திரைகளை கேட்டதாகவும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...கல்குவாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரியில் சாய்ராம் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தினேஷ் குமார்(28). இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர் போதைக்காக சில மாத்திரைகளை மருந்துச் சீட்டு இல்லாமலும், இலவசமாகவும் கேட்டுள்ளார். அப்போது மருந்தக உரிமையாளர் போதைக்கு மாத்திரையை தர முடியாது கூறியுள்ளார்.

இதனால் கோபத்தில் சென்ற அந்த நபர், அவரது நண்பரை அழைத்து வந்து மருந்தக உரிமையாளரை அடையாளம் காட்டிவிட்டு சென்றுள்ளார். அவரும் மருந்தக உரிமையாளரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி, இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை பிடித்து தாம்பரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் மருந்தக உரிமையாளரை தாக்கியது பம்மல் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற கோபி நாத்(25) என்பதும், இவரது நண்பர் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த பரத் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த மருந்தகத்தில் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதாகவும் அதன் காரணமாகவே பரத் என்பவர் போதைக்காக மாத்திரைகளை கேட்டதாகவும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...கல்குவாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

Last Updated : Feb 4, 2021, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.