ETV Bharat / jagte-raho

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது! - crime news

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
கும்மிடிப்பூண்டியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
author img

By

Published : Dec 17, 2020, 3:24 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் சாலை சந்திப்பில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறை!

அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்திலிருந்து பிளாஸ்டிக் பையுடன் இறங்கிய மூவர், வாகன தணிக்கையில் இருந்த காவல் துறையினரை கண்டு ஓட ஆரம்பித்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (26), திருமுல்லைவாயில் பெரியார் நகரைச் சேர்ந்த சாமுவேல் ஷ்யாம் (19), பாடி மண்ணூர்பேட்டை சேர்ந்த வினோத்குமார் (17) என்பதும் தெரியவந்தது.

சிக்கிக்கொண்ட கஞ்சா கடத்தல்காரர்கள்

மேலும், இவர்கள் ஆந்திராவிலிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த சிப்காட் காவல் துறையினர், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து பின்னர் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அவர்களை அடைத்தனர்.

இதையும் படிங்க...ஆவடியில் பைக் மீது வேன் மோதி விபத்து - பொறியாளர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் சாலை சந்திப்பில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறை!

அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்திலிருந்து பிளாஸ்டிக் பையுடன் இறங்கிய மூவர், வாகன தணிக்கையில் இருந்த காவல் துறையினரை கண்டு ஓட ஆரம்பித்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (26), திருமுல்லைவாயில் பெரியார் நகரைச் சேர்ந்த சாமுவேல் ஷ்யாம் (19), பாடி மண்ணூர்பேட்டை சேர்ந்த வினோத்குமார் (17) என்பதும் தெரியவந்தது.

சிக்கிக்கொண்ட கஞ்சா கடத்தல்காரர்கள்

மேலும், இவர்கள் ஆந்திராவிலிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த சிப்காட் காவல் துறையினர், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து பின்னர் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அவர்களை அடைத்தனர்.

இதையும் படிங்க...ஆவடியில் பைக் மீது வேன் மோதி விபத்து - பொறியாளர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.