ETV Bharat / jagte-raho

திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை - காவல்துறை விசாரணை!

author img

By

Published : Jul 15, 2020, 2:00 AM IST

சென்னை: ஆவடி அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DMK panchayat leader hacked to death - Police investigation!

சென்னை திருநின்றவூர் அடுத்த கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு. அப்பகுதி தி.மு.க கட்சியின் ஊராட்சி செயலாளராகவுள்ள இவர், கொசவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இன்று(ஜூலை14) மாலை கொசவம்பாளையம் ஊராட்சியில் நடைபெறும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பரமகுரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை திருநின்றவூர் அடுத்த கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு. அப்பகுதி தி.மு.க கட்சியின் ஊராட்சி செயலாளராகவுள்ள இவர், கொசவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இன்று(ஜூலை14) மாலை கொசவம்பாளையம் ஊராட்சியில் நடைபெறும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பரமகுரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.