ETV Bharat / jagte-raho

சாதி வெறியாட்டம்: காதலை எதிர்த்துக் கத்தி பிடித்த 17 வயது சிறுவன்!

author img

By

Published : Jun 9, 2020, 1:54 AM IST

Updated : Jun 9, 2020, 9:31 AM IST

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் தனது சகோதரியை காதலிப்பது பிடிக்காமல் கத்தியால் குத்திய சிறுவனைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

17 வயது சிறுவன் கைது
கேரளாவில் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் கைது

கேரளா மாநிலம் முவட்டுப்புழா பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர், அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண்ணைக் காதலித்துவந்தார்.

இந்நிலையில், அந்த நபர் கடையில் முகக்கவசம் வாங்கிக்கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் சகோதரர் 17 வயதான சிறுவன், கையில் கத்தியோடு வந்து தங்கையின் காதலனைக் குத்தினார்.

இதனைத் தடுக்க முயன்ற அவரது நண்பரும் படுகாயமடைந்தார். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவுசெய்த காவல் துறையினர், அந்தச் சிறுவனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கேரளா மாநிலம் முவட்டுப்புழா பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர், அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண்ணைக் காதலித்துவந்தார்.

இந்நிலையில், அந்த நபர் கடையில் முகக்கவசம் வாங்கிக்கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் சகோதரர் 17 வயதான சிறுவன், கையில் கத்தியோடு வந்து தங்கையின் காதலனைக் குத்தினார்.

இதனைத் தடுக்க முயன்ற அவரது நண்பரும் படுகாயமடைந்தார். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவுசெய்த காவல் துறையினர், அந்தச் சிறுவனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Last Updated : Jun 9, 2020, 9:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.