ETV Bharat / jagte-raho

அழகான பொண்ணுங்க இருக்காங்க... இளைஞரிடம் ஆசைவார்த்தை கூறி ஆட்டய போட்ட கும்பல் - AUNDIPATTI

தேனி: ஆண்டிப்பட்டியில் கேரள இளைஞரிடமிருந்து நகை, பணம் முதலியவற்றை பறித்துச் சென்ற மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கேரள வாலிபரிடமிருந்து நகையை பறித்துச் சென்ற கும்பல் கைது!
author img

By

Published : May 10, 2019, 9:31 AM IST

கேரள மாநிலம் மூணாறு செண்டுவாரை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரின் மகன் அணீத்குமார் (25). மூணாறு அரசுப் போக்குவரத்து பணிமனையில் தினக்கூலியாக பணிபுரிந்துவருகிறார். ஏப்ரல் 3ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு மூன்று நாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, உணவு உண்பதற்காக ஆண்டிப்பட்டியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், தங்களிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைக்காட்டி கூட்டிச்சென்று அணீத்குமாரிடமிருந்து, ஒன்றரை பவுன் தங்கச்செயின், ஐந்து கிராம் எடையுள்ள மோதிரம், ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த 1,500 ரூபாய் உள்ளிட்டவற்றை மிரட்டி பறித்துள்ளனர்.

கேரள இளைஞரிடமிருந்து நகையை பறித்துச் சென்ற கும்பல் கைது!

பணம், நகைகளை பறிகொடுத்து விட்டு, வீடு திரும்பிய அவர் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவரது பெற்றோர் இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக் (23), தேனி முல்லை நகரைச் சேர்ந்த மனோஆனந்த் (32), போடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரிமுத்து (24) மூன்று பேர் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், நகைகளை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் மூணாறு செண்டுவாரை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரின் மகன் அணீத்குமார் (25). மூணாறு அரசுப் போக்குவரத்து பணிமனையில் தினக்கூலியாக பணிபுரிந்துவருகிறார். ஏப்ரல் 3ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு மூன்று நாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, உணவு உண்பதற்காக ஆண்டிப்பட்டியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், தங்களிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைக்காட்டி கூட்டிச்சென்று அணீத்குமாரிடமிருந்து, ஒன்றரை பவுன் தங்கச்செயின், ஐந்து கிராம் எடையுள்ள மோதிரம், ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த 1,500 ரூபாய் உள்ளிட்டவற்றை மிரட்டி பறித்துள்ளனர்.

கேரள இளைஞரிடமிருந்து நகையை பறித்துச் சென்ற கும்பல் கைது!

பணம், நகைகளை பறிகொடுத்து விட்டு, வீடு திரும்பிய அவர் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவரது பெற்றோர் இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக் (23), தேனி முல்லை நகரைச் சேர்ந்த மனோஆனந்த் (32), போடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரிமுத்து (24) மூன்று பேர் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், நகைகளை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.           09.05.2019.

ஆண்டிபட்டியில் கேரள வாலிபரை மிரட்டி தங்கசெயின், மோதிரம், செல்போன்  மற்றும் பணத்தை பறித்த 3 பேர் கைது.

கேரள மாநிலம் மூணார் செண்டுவாரை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து என்வரின் மகன் அணீத்குமார்(25). மூணாறு அரசுப் போக்குவரத்து பணிமணையில் தினக்கூலியாக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 3ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனது  உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு 6ஆம் தேதி திங்கள்கிழமை ஊர் திரும்பியுள்ளார். வரும் வழியில் நண்பர்களை பார்ப்பதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வந்தார். ஆண்டிபட்டி உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருக்கையில், அங்கு வந்த 3பேர், அணீத்குமாரிடம், தங்களிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். அதனை நம்பி சென்றவரை ஆண்டிபட்டி - ஏத்தகோவில் சாலையில் ரயில்வே கேட் பகுதியில் உள்ள புதர் மறைவிற்கு அழைத்து சென்ற 3 பேரும், கீழே கிடந்த பீர்பாட்டிலை உடைத்து மிரட்டியுள்ளனர்.

 அவர்களது மிரட்டலுக்கு பயந்த அணீத்குமார், தான் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச்செயின், 5கிராம் எடையுள்ள மோதிரம், ஆண்டராய்டு செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த பணம் 1500 ரூபாய் ஆகியவற்றை  கழட்டி கொடுத்தார். அதன் பின்னர் அவரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து சொந்த ஊருக்கு சென்ற அணீத்குமார் பெற்றோரிடம் இது சம்பந்தமாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் உதவியுடன் ஆண்டிபட்டி காவல்நிலையத்திற்கு வந்து  புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை ஆட்டோ டிரைவரான கார்த்திக்(23), தேனி முல்லைநகரை சேர்ந்த மனோஆனந்த்(32),  போடியை சேர்ந்த கார் டிரைவரர் மாரிமுத்து (24) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அணீத்குமாரை மிரட்டி செயின், பணம் பறித்ததை ஒத்துகொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு 3பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_02_09_AUNDIPATTI ROBBERY ARREST_VIS_7204333

2)      TN_TNI_02a_09_AUNDIPATTI ROBBERY ARREST_SCRIPT_7204333

 

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

 

Description: images

 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.