ETV Bharat / international

டென்மார்க் ஷாப்பிங் காம்ப்ளக்சில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் உயிரிழப்பு...

author img

By

Published : Jul 4, 2022, 10:59 AM IST

டென்மார்க்கில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

several-dead-in-denmark-mall-shooting-suspect-arrested
several-dead-in-denmark-mall-shooting-suspect-arrested

கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் நேற்று (ஜூலை 3) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கோபன்ஹேகன் போலீஸ் சம்பவயிடத்திற்கு விரைந்து, உடல்களை மீட்டனர்.

காயமடைந்த மூன்று பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த வணிக வளாகத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து சந்தேகிக்கும் 22 வயது இளைஞரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

மருத்துவமனையில் உள்ள 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல 2015ஆம் ஆண்டு டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். ஐந்து போலீசார் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 19 பேர் உயிரிழப்பு

கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் நேற்று (ஜூலை 3) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கோபன்ஹேகன் போலீஸ் சம்பவயிடத்திற்கு விரைந்து, உடல்களை மீட்டனர்.

காயமடைந்த மூன்று பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த வணிக வளாகத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து சந்தேகிக்கும் 22 வயது இளைஞரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

மருத்துவமனையில் உள்ள 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல 2015ஆம் ஆண்டு டென்மார்க்கில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். ஐந்து போலீசார் காயமடைந்தனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 19 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.