ETV Bharat / international

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள்... - பைடன் ஷாக்..!

author img

By

Published : Nov 17, 2022, 10:05 AM IST

நீண்ட காலமாக ஜனநாயக கட்சியின் வசம் இருந்த பிரதிநிதிகள் சபை, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சியின் வசம் சென்றுள்ளது.

அமெரிக்க இடைக்கால தேர்தல்
அமெரிக்க இடைக்கால தேர்தல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடத்தப்படுகிறது. அதிபர் தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும். செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அம்சங்களை கொண்டது அமெரிக்க நாடாளுமன்றம்.

அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், மிட் டெர்ம் எனப்படும் இடைக்கால தேர்தல் இம்மாதத்தில் நடைபெற்றது. 435 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 35 செனட் சபை உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற 218 இடங்கள் வேண்டிய நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி எளிதில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது. பொருளாதார மந்தநிலை, அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், உக்ரைன் - ரஷ்யா போரில் அதிபர் பைடனின் நிலையில் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் முடிவில் பெரும் மாற்றம் வரும் என கணிக்கப்பட்டது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வாக்குப்பதிவில் எதிரொலித்தன. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், 218 இடங்களில் பெரும்பான்மை பெற்று குடியரசுக் கட்சி ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துவிட்டன.

இதன்மூலம் அதிபர் பைடனின் ஜனநாயக கட்சியிடம் இருந்த பிரதிநிதிகள் சபை, மீண்டும் குடியரசுக் கட்சியின் வசம் வந்துள்ளது.

அதேநேரம் கூட்டணி கட்சியின் ஆதரவுடன், செனட் சபையை ஜனநாயக கட்சி தக்கவைக்கும் சூழல் நிலவுகிறது. நாடாளுமன்றத்தின் செனட் சபையை ஜனநாயக கட்சியும், பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சியும் கைப்பற்றி இருப்பது அமெரிக்க அரசியில் வரலாற்றில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரதிநிதிகள் சபையில் ஏற்பட்ட தோல்வியால், அதிபர் பைடனின் முக்கியத் திட்டங்கள் வெற்றி பெறுவதில் இழுபறி ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாழ்த்து கூறிய அமெரிக்க அதிபர் பைடன், குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் கெவின் மெக்கர்த்திடம், மக்கள் நலன் காக்க குடியரசு கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: குஜராத் சட்டமன்ற தேர்தல்...102 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடத்தப்படுகிறது. அதிபர் தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும். செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அம்சங்களை கொண்டது அமெரிக்க நாடாளுமன்றம்.

அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், மிட் டெர்ம் எனப்படும் இடைக்கால தேர்தல் இம்மாதத்தில் நடைபெற்றது. 435 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 35 செனட் சபை உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற 218 இடங்கள் வேண்டிய நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி எளிதில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது. பொருளாதார மந்தநிலை, அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், உக்ரைன் - ரஷ்யா போரில் அதிபர் பைடனின் நிலையில் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் முடிவில் பெரும் மாற்றம் வரும் என கணிக்கப்பட்டது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வாக்குப்பதிவில் எதிரொலித்தன. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், 218 இடங்களில் பெரும்பான்மை பெற்று குடியரசுக் கட்சி ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துவிட்டன.

இதன்மூலம் அதிபர் பைடனின் ஜனநாயக கட்சியிடம் இருந்த பிரதிநிதிகள் சபை, மீண்டும் குடியரசுக் கட்சியின் வசம் வந்துள்ளது.

அதேநேரம் கூட்டணி கட்சியின் ஆதரவுடன், செனட் சபையை ஜனநாயக கட்சி தக்கவைக்கும் சூழல் நிலவுகிறது. நாடாளுமன்றத்தின் செனட் சபையை ஜனநாயக கட்சியும், பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சியும் கைப்பற்றி இருப்பது அமெரிக்க அரசியில் வரலாற்றில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரதிநிதிகள் சபையில் ஏற்பட்ட தோல்வியால், அதிபர் பைடனின் முக்கியத் திட்டங்கள் வெற்றி பெறுவதில் இழுபறி ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாழ்த்து கூறிய அமெரிக்க அதிபர் பைடன், குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் கெவின் மெக்கர்த்திடம், மக்கள் நலன் காக்க குடியரசு கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: குஜராத் சட்டமன்ற தேர்தல்...102 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.