ETV Bharat / international

உலகை திசைதிருப்பும் நெதன்யாகு - பாலஸ்தீனம் குற்றச்சாட்டு

author img

By

Published : Jun 17, 2020, 2:55 PM IST

ரமலா : பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேலுடன் ஒன்றிணைக்கும் திட்டம் குறித்து அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உலகை திசைதிருப்பி வருவதாக பாலஸ்தீன அரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

Netanyahu
Netanyahu

மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனம், மேற்கு நதிக்கரை எனப்படும் 'வெஸ்ட் பேங்க்', காஸா ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. யூத மக்கள் அதிகம் வசிக்கும் அண்டை நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை தன்னுடையது என உரிமம் கோரி வருகிறது. இதனிடையே, பாலஸ்தீனத்தின் மேற்கு நதிக்கரையில் இஸ்ரேல் மக்கள் நீண்ட காலமாக குடியேறி வருகின்றனர். இதை ஐநா ஆக்கிரமிப்புகளாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் மக்கள் குடியேறியுள்ள மேற்கு நதிக்கரை பகுதிகளை அதனோடு இணைத்துக்கொள்ளும் முயற்சியில் இஸ்ரேல் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு அதரவு திரட்டும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உலகைத் திசை திருப்பி வருவதாகப் பாலஸ்தீன வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சகம் இ-மெயில் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு நதிக்கரையை ஒன்றிணைக்கும் இஸ்ரேல் அரசின் திட்டத்தை சுமுகமாக செயல்படுத்த உலக மக்களையும், அலுவலர்களையும் நெதன்யாகு திசைதிருப்பி வருகிறார். இந்த திட்டத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில், அந்த நிலைபாட்டை மாற்ற முயன்று வருகிறார்" எனக் கூறியுள்ளது.

முன்னதாக, ஜூலை மாதம் செயல்படுத்தவிருந்த இந்த திட்டத்தை தள்ளிவைக்கப்படுவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகும் உறுதியளித்ததாக செய்தி வெளியானது.

இதையும் படிங்க : இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!

மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனம், மேற்கு நதிக்கரை எனப்படும் 'வெஸ்ட் பேங்க்', காஸா ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. யூத மக்கள் அதிகம் வசிக்கும் அண்டை நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை தன்னுடையது என உரிமம் கோரி வருகிறது. இதனிடையே, பாலஸ்தீனத்தின் மேற்கு நதிக்கரையில் இஸ்ரேல் மக்கள் நீண்ட காலமாக குடியேறி வருகின்றனர். இதை ஐநா ஆக்கிரமிப்புகளாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் மக்கள் குடியேறியுள்ள மேற்கு நதிக்கரை பகுதிகளை அதனோடு இணைத்துக்கொள்ளும் முயற்சியில் இஸ்ரேல் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு அதரவு திரட்டும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உலகைத் திசை திருப்பி வருவதாகப் பாலஸ்தீன வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சகம் இ-மெயில் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு நதிக்கரையை ஒன்றிணைக்கும் இஸ்ரேல் அரசின் திட்டத்தை சுமுகமாக செயல்படுத்த உலக மக்களையும், அலுவலர்களையும் நெதன்யாகு திசைதிருப்பி வருகிறார். இந்த திட்டத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில், அந்த நிலைபாட்டை மாற்ற முயன்று வருகிறார்" எனக் கூறியுள்ளது.

முன்னதாக, ஜூலை மாதம் செயல்படுத்தவிருந்த இந்த திட்டத்தை தள்ளிவைக்கப்படுவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகும் உறுதியளித்ததாக செய்தி வெளியானது.

இதையும் படிங்க : இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.