ETV Bharat / international

நாட்டின் முக்கிய நகரில் அவசர நிலை: என்ன தான் நடக்கிறது இஸ்ரேலில்?

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் பதற்றம் நிலவிவரும் சூழ்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய நகரில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

author img

By

Published : May 12, 2021, 6:16 PM IST

அவசரநிலையை அறிவித்த இஸ்ரேல்
அவசரநிலையை அறிவித்த இஸ்ரேல்

அரேபியர்கள் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லோட் நகரில் இஸ்ரேலிய யூதர்களும் அரேபியர்களும் வசித்து வருகின்றனர். இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் நாட்டின் லோட் நகரில் வசிக்கும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் ஊடகங்களில் தேவாலயங்கள் சிலவற்றிற்கும், கார்களுக்கும் தீ வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உயர் மட்ட பாதுகாப்பு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் முக்கிய நகரான லோட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள அரேபியர்களை கட்டுப்படுத்தும் வகையில், ராணுவ நிர்வாகம் 1966ஆம் ஆண்டுக்குப் பின்பு, அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவசர நிலையை அறிவிப்பது இதுவே முதல்முறை.

லோட் நகர மேயர் ரெவிவோ பிரதமரிடம் அவசர நிலையை அறிவிக்க கோரியதாகத் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,"லோட் பகுதியில் அவசர நிலையை அறிவிக்க நான் பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். பல ஆண்டுகளாக நாங்கள் இங்கே செய்த வேலைகள் பாழ் ஆகி விட்டன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐ.நா.வின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் இரு தரப்பினரையும் வன்முறையில் ஈடுபடாமல் இருந்து அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று ஹமாஸ் அமைப்பு 137 ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதில் தாக்குதலாக இஸ்ரேல் 630 ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.

கிழக்கு ஜெருசலேம் பகுதியிலுள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு வெளியேற்ற கட்டாயப்படுத்தியதே இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவ காரணமாக அமைந்துள்ளது.

அரேபியர்கள் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லோட் நகரில் இஸ்ரேலிய யூதர்களும் அரேபியர்களும் வசித்து வருகின்றனர். இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் நாட்டின் லோட் நகரில் வசிக்கும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் ஊடகங்களில் தேவாலயங்கள் சிலவற்றிற்கும், கார்களுக்கும் தீ வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உயர் மட்ட பாதுகாப்பு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் முக்கிய நகரான லோட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள அரேபியர்களை கட்டுப்படுத்தும் வகையில், ராணுவ நிர்வாகம் 1966ஆம் ஆண்டுக்குப் பின்பு, அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவசர நிலையை அறிவிப்பது இதுவே முதல்முறை.

லோட் நகர மேயர் ரெவிவோ பிரதமரிடம் அவசர நிலையை அறிவிக்க கோரியதாகத் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,"லோட் பகுதியில் அவசர நிலையை அறிவிக்க நான் பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். பல ஆண்டுகளாக நாங்கள் இங்கே செய்த வேலைகள் பாழ் ஆகி விட்டன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐ.நா.வின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் இரு தரப்பினரையும் வன்முறையில் ஈடுபடாமல் இருந்து அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று ஹமாஸ் அமைப்பு 137 ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதில் தாக்குதலாக இஸ்ரேல் 630 ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.

கிழக்கு ஜெருசலேம் பகுதியிலுள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு வெளியேற்ற கட்டாயப்படுத்தியதே இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவ காரணமாக அமைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.