ETV Bharat / international

காஸா தாக்குதல்: அவசர உச்சி மாநாட்டை நடத்திய இஸ்லாமிய நாடுகள்

57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இஸ்ரேல், காஸா நகரின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக அவசர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளது. அனைத்து நாடுகளும் பாலஸ்தீனியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கருத்தையே கொண்டிருந்தன.

author img

By

Published : May 16, 2021, 9:45 PM IST

Islamic nations hold emergency summit
இஸ்ரேல்-காசா தாக்குதல்: அவசர உச்சி மாநாட்டை நடத்திய இஸ்லாமிய நாடுகள்

துபாய்: 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இஸ்ரேல் காஸா நகரின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக அவசர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளது.

இதில் பேசிய ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஹனீப் அட்மர், பாலஸ்தீனிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை என்பது இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ரத்தக்காயம் என வர்ணித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியை நிர்வாகிக்கும் பாலஸ்தீன ஆணையத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாட் மல்கி, "நாம் அல்லாவிடம் கடைசி நாளை எதிர்பார்க்கிறோம் எனச் சொல்லவேண்டும். நாங்கள் நீண்டநாள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துச் சண்டையிடுகிறோம். அதுதான் அடிப்படை பிரச்னை" எனப் பேசியுள்ளார்.

ஆனால், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியின் மீது பாலஸ்தீனியத்தின் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை.

கிழக்கு ஜெருசலேம், வெஸ்ட் பேங்க், காசா பகுதியில் அண்மையில் நிலவும் சூழலுக்கு இஸ்ரேலே காரணம், கடந்த வாரம் நாங்கள் விடுத்த எச்சரிக்கை கவனிக்கப்படவில்லை என துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்டமாகப் பேசியுள்ளார்.

ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர், இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதாகவும், இஸ்ரேல் எதிர்ப்பின் மொழியை மட்டும் புரிந்துகொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் தாக்குதலில் இருந்து பாலஸ்தீனிய மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.

அரேபிய தீபகற்பம், பெர்சியன் வளைகுடா பகுதிகளில் சண்டைக்கான எதிர்வினைகள் தென்படத்தொடங்கியுள்ளன. அல்ஜசீரா ஊடகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு, நேற்று கத்தாரில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் துறையின் தலைவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, "பாலஸ்தீனியர்கள் ஜெருசலேமை தலைநகராக கொண்ட பாலஸ்தீனிய நாட்டைத் தவிர, வேறு எதையும் ஏற்கமாட்டார்கள்" என்றார்.

கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சரைப் போலவே குவைத் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஹனியேவுடன் நேற்று பேசியதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேல்-அமெரிக்காவுடன் அங்கீகார ஒப்பந்தங்களை மேற்கொண்ட பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு நாடுகளையும் இக்கூட்டத்தில் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சித்தார்.

மேலும், அங்கீகார ஒப்பந்தம் என்பது இஸ்லாமிய சமூகத்தில் பிளவுகளை உண்டாக்க ஏற்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காஸாவில் இயங்கும் சர்வதேச ஊடக அலுவலகங்களைத் தாக்கிய இஸ்ரேல்: பின்னணி என்ன?

துபாய்: 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இஸ்ரேல் காஸா நகரின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக அவசர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளது.

இதில் பேசிய ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஹனீப் அட்மர், பாலஸ்தீனிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை என்பது இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ரத்தக்காயம் என வர்ணித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியை நிர்வாகிக்கும் பாலஸ்தீன ஆணையத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாட் மல்கி, "நாம் அல்லாவிடம் கடைசி நாளை எதிர்பார்க்கிறோம் எனச் சொல்லவேண்டும். நாங்கள் நீண்டநாள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துச் சண்டையிடுகிறோம். அதுதான் அடிப்படை பிரச்னை" எனப் பேசியுள்ளார்.

ஆனால், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியின் மீது பாலஸ்தீனியத்தின் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை.

கிழக்கு ஜெருசலேம், வெஸ்ட் பேங்க், காசா பகுதியில் அண்மையில் நிலவும் சூழலுக்கு இஸ்ரேலே காரணம், கடந்த வாரம் நாங்கள் விடுத்த எச்சரிக்கை கவனிக்கப்படவில்லை என துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்டமாகப் பேசியுள்ளார்.

ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர், இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதாகவும், இஸ்ரேல் எதிர்ப்பின் மொழியை மட்டும் புரிந்துகொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் தாக்குதலில் இருந்து பாலஸ்தீனிய மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.

அரேபிய தீபகற்பம், பெர்சியன் வளைகுடா பகுதிகளில் சண்டைக்கான எதிர்வினைகள் தென்படத்தொடங்கியுள்ளன. அல்ஜசீரா ஊடகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு, நேற்று கத்தாரில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் துறையின் தலைவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, "பாலஸ்தீனியர்கள் ஜெருசலேமை தலைநகராக கொண்ட பாலஸ்தீனிய நாட்டைத் தவிர, வேறு எதையும் ஏற்கமாட்டார்கள்" என்றார்.

கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சரைப் போலவே குவைத் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஹனியேவுடன் நேற்று பேசியதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேல்-அமெரிக்காவுடன் அங்கீகார ஒப்பந்தங்களை மேற்கொண்ட பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு நாடுகளையும் இக்கூட்டத்தில் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சித்தார்.

மேலும், அங்கீகார ஒப்பந்தம் என்பது இஸ்லாமிய சமூகத்தில் பிளவுகளை உண்டாக்க ஏற்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காஸாவில் இயங்கும் சர்வதேச ஊடக அலுவலகங்களைத் தாக்கிய இஸ்ரேல்: பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.