ETV Bharat / international

இஸ்ரேல் தூதரகம் குண்டுவெடிப்பு; ஈரானிய அமைப்புகளுக்கு தொடர்பா?

author img

By

Published : Jan 30, 2021, 6:43 PM IST

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடித்த நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

Israel embassy blast Israel embassy blast investigation Ajay Kumar Bhalla on israel embassy blast Home Secretary reviews security situation amit shah meeting on israel embassy blast Jaish Ul Hind investigation of israel embassy blast இஸ்ரேல் தூதரகம் குண்டுவெடிப்பு குண்டுவெடிப்பு இஸ்ரேல் ஈரானிய அமைப்புகளுக்கு தொடர்பா? ஜெய்ஷ்-உல்-ஹிந்த்
Israel embassy blast Israel embassy blast investigation Ajay Kumar Bhalla on israel embassy blast Home Secretary reviews security situation amit shah meeting on israel embassy blast Jaish Ul Hind investigation of israel embassy blast இஸ்ரேல் தூதரகம் குண்டுவெடிப்பு குண்டுவெடிப்பு இஸ்ரேல் ஈரானிய அமைப்புகளுக்கு தொடர்பா? ஜெய்ஷ்-உல்-ஹிந்த்

டெல்லி: டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே ஜன.29ஆம் தேதி சிறிய ரக குண்டு வெடித்தது.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜன.29ஆம் தேதி குண்டுவெடித்தது. இது தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வெளியான தகவலில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உளவுத்துறை தலைவர் உயர் அலுவலர்களுடன் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளார். அடுத்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. முதல் கூட்டத்தில், “குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள அமைப்புகள் அல்லது நபர்களை கண்டுப்பிடிப்போம். பாதுகாப்பு நிறுவனங்கள் துரிதமாக செயல்படவேண்டும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ஷ்-உல்-ஹிந்த்

இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற அமைப்பு இருக்கலாம் எனத் தெரியவருகிறது. அந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றன. இதற்கிடையில் இந்தக் குண்டுவெடிப்பில் ஈரானிய அமைப்புகள் ஈடுபட்டுள்ளதா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதையும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

இஸ்ரேலிய தூதரகம் அருகே 2012இல் இதேபோன்ற குண்டுவெடிப்பில், பாதுகாப்பு அமைப்புகள் ஈரானிய தொடர்பு கொண்ட மூன்று பேரை கைது செய்தன. இந்தச் சம்பவத்தில் தூதரக அலுவலர்கள் உள்பட சிலர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் விசாரணை

இதனிடையே, பாதுகாப்பு உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், “வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்திற்கு காரணமான அமைப்பு அல்லது குழுவை நாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. குண்டுவெடிப்பில் ஈரானிய தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் அரசு கூட அதிகாரப்பூர்வமாக உரிமை கோரவில்லை” என்றார். மேலும், “முறையான விசாரணைக்கு பின்னரே மற்ற விவரங்கள் வெளியே வரும்” என்றார்.

இதற்கிடையில், இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத் இந்தச் சம்பவம் குறித்து தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தேசிய பாதுகாப்புக் காவலர் (என்எஸ்ஜி) மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கை உள்துறை அமைச்சகம் என்ஐஏவிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க: டெல்லியில் பதற்றம்... இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

டெல்லி: டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே ஜன.29ஆம் தேதி சிறிய ரக குண்டு வெடித்தது.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜன.29ஆம் தேதி குண்டுவெடித்தது. இது தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வெளியான தகவலில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உளவுத்துறை தலைவர் உயர் அலுவலர்களுடன் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளார். அடுத்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. முதல் கூட்டத்தில், “குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள அமைப்புகள் அல்லது நபர்களை கண்டுப்பிடிப்போம். பாதுகாப்பு நிறுவனங்கள் துரிதமாக செயல்படவேண்டும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ஷ்-உல்-ஹிந்த்

இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற அமைப்பு இருக்கலாம் எனத் தெரியவருகிறது. அந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றன. இதற்கிடையில் இந்தக் குண்டுவெடிப்பில் ஈரானிய அமைப்புகள் ஈடுபட்டுள்ளதா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதையும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

இஸ்ரேலிய தூதரகம் அருகே 2012இல் இதேபோன்ற குண்டுவெடிப்பில், பாதுகாப்பு அமைப்புகள் ஈரானிய தொடர்பு கொண்ட மூன்று பேரை கைது செய்தன. இந்தச் சம்பவத்தில் தூதரக அலுவலர்கள் உள்பட சிலர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் விசாரணை

இதனிடையே, பாதுகாப்பு உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், “வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்திற்கு காரணமான அமைப்பு அல்லது குழுவை நாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. குண்டுவெடிப்பில் ஈரானிய தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் அரசு கூட அதிகாரப்பூர்வமாக உரிமை கோரவில்லை” என்றார். மேலும், “முறையான விசாரணைக்கு பின்னரே மற்ற விவரங்கள் வெளியே வரும்” என்றார்.

இதற்கிடையில், இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத் இந்தச் சம்பவம் குறித்து தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தேசிய பாதுகாப்புக் காவலர் (என்எஸ்ஜி) மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழுவும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கை உள்துறை அமைச்சகம் என்ஐஏவிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க: டெல்லியில் பதற்றம்... இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.