ETV Bharat / international

2020 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு!

author img

By

Published : Oct 12, 2020, 3:22 PM IST

Updated : Oct 12, 2020, 4:06 PM IST

2020ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்கர்களான பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவர் வென்றுள்ளனர்.

Nobel Prizes
Nobel Prizes

2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 5ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இன்று(அக்.12) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்ச பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவர் வென்றுள்ளனர்.

இந்தாண்டு பரிசு குறித்து நோபல் குழு கூறியதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இருவரும் ஏலம் முறைகள் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு மூலம் பாரம்பரிய முறைப்படி விற்பனை செய்யும் பொருள்கள் மற்றும் சேவைகளை சிறப்பான முறையில் விற்பனை செய்வது எப்படி என வழிமுறைகளை வகுத்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் உள்ள விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், வரி செலுத்துவோர் மிகவும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகையான சுமார் ரூ.8.32 கோடி இருவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என நோபல் குழு அறிவித்துள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரம்மருடன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது.

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டு இயற்பியல், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு தலா மூவருக்கும், வேதியல் துறைக்கான நோபல் பரிசு இருவருக்கும், இலக்கியத்திற்கான விருது பெண் கவிஞர் ஒருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மூன்று நாடுகளிடம் முக்கியக் கோரிக்கை வைக்கும் நகோர்னா - காராபாக் பிராந்தியம்

2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 5ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இன்று(அக்.12) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்ச பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவர் வென்றுள்ளனர்.

இந்தாண்டு பரிசு குறித்து நோபல் குழு கூறியதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இருவரும் ஏலம் முறைகள் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு மூலம் பாரம்பரிய முறைப்படி விற்பனை செய்யும் பொருள்கள் மற்றும் சேவைகளை சிறப்பான முறையில் விற்பனை செய்வது எப்படி என வழிமுறைகளை வகுத்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் உள்ள விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், வரி செலுத்துவோர் மிகவும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகையான சுமார் ரூ.8.32 கோடி இருவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என நோபல் குழு அறிவித்துள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரம்மருடன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது.

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டு இயற்பியல், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு தலா மூவருக்கும், வேதியல் துறைக்கான நோபல் பரிசு இருவருக்கும், இலக்கியத்திற்கான விருது பெண் கவிஞர் ஒருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மூன்று நாடுகளிடம் முக்கியக் கோரிக்கை வைக்கும் நகோர்னா - காராபாக் பிராந்தியம்

Last Updated : Oct 12, 2020, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.