ETV Bharat / international

கரோனா பாதிப்பு: போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி - போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

லண்டன்: கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 10 நாள்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Borish Johnson  John tests positive  Bristish PM  Coronavirus  COVID-19 in Britan  Johnson admitted  கரோனா பாதிப்பு  போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி  பிரிட்டன், போரிஸ் ஜான்சன், கரோனா பாதிப்பு, இங்கிலாந்தில் கரோனா பாதிப்பு
Borish Johnson John tests positive Bristish PM Coronavirus COVID-19 in Britan Johnson admitted கரோனா பாதிப்பு போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி பிரிட்டன், போரிஸ் ஜான்சன், கரோனா பாதிப்பு, இங்கிலாந்தில் கரோனா பாதிப்பு
author img

By

Published : Apr 6, 2020, 4:19 PM IST

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையின் போது அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர்.

இந்நிலையில் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்காக போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “55 வயதான போரிஸ் ஜான்சன் தொடர்ச்சியான வைரஸ் அறிகுறிகளை கொண்டுள்ளார்” என்றார்.

மேலும், “கரோனா பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்றும் தெளிவுப்படுத்தினார். போரிஸ் ஜான்சன் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.

இருப்பினும் அவ்வப்போது காணொலி வாயிலாக அந்நாட்டு மக்களை தொடர்புகொள்வார். அவரது உடலில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இது கரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளில் ஒன்றாகும். இதனால் அவர் அதிக நேரம் தனிமையில் இருக்க வேண்டும்.

இந்நிலையில் போரிஸ் ஜான்சன், “நான் நன்றாக உணர்கிறேன். எனக்கு சிறிய அறிகுறிகள் உள்ளன. ஆகவே என்னை நானே ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த அறிகுறிகள் தொடர்வதால் நான் தனிமைப்படுத்துதலை தொடர வேண்டும்” என புதிய காணொலி செய்தியில் கூறினார்.

முன்பை விட அவர் சோர்வுடன் காணப்படுகிறார். இதற்கிடையில் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக அவர் தேசிய அளவிலான கை தட்டல் உள்ளிட்ட ஒலியெழுப்பும் நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையின் போது அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர்.

இந்நிலையில் கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்காக போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “55 வயதான போரிஸ் ஜான்சன் தொடர்ச்சியான வைரஸ் அறிகுறிகளை கொண்டுள்ளார்” என்றார்.

மேலும், “கரோனா பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்றும் தெளிவுப்படுத்தினார். போரிஸ் ஜான்சன் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.

இருப்பினும் அவ்வப்போது காணொலி வாயிலாக அந்நாட்டு மக்களை தொடர்புகொள்வார். அவரது உடலில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இது கரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளில் ஒன்றாகும். இதனால் அவர் அதிக நேரம் தனிமையில் இருக்க வேண்டும்.

இந்நிலையில் போரிஸ் ஜான்சன், “நான் நன்றாக உணர்கிறேன். எனக்கு சிறிய அறிகுறிகள் உள்ளன. ஆகவே என்னை நானே ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த அறிகுறிகள் தொடர்வதால் நான் தனிமைப்படுத்துதலை தொடர வேண்டும்” என புதிய காணொலி செய்தியில் கூறினார்.

முன்பை விட அவர் சோர்வுடன் காணப்படுகிறார். இதற்கிடையில் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக அவர் தேசிய அளவிலான கை தட்டல் உள்ளிட்ட ஒலியெழுப்பும் நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.