உக்ரைன் நாட்டில் கடந்த சில நாள்களாக மிகவும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அண்டை நாடான ரஷ்யா, உக்ரைன் நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்திருவருகிறது.
உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒரு லட்சம் படையினரை ரஷ்யா தற்போது குவித்துவைத்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் கவலையை ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
"உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. அங்கு பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, உடனடியாக கிடைக்கும் விமானத்தில் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என அமெரிக்க அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் என கணித்துள்ள நிலையில், இந்த தகவலை ரஷ்யா மறுத்துள்ளது.
இதையும் படிங்க: அர்மேனியா அதிபர் திடீர் ராஜினாமா