ETV Bharat / international

வெளிநாட்டுத் தூதர்களுக்கு விருந்தளித்த ஜெய்சங்கர்!

டெல்லி: இந்தியாவிற்கான வெளிநாட்டுத் தூதர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரவு விருந்து அளித்தார்.

author img

By

Published : Jun 23, 2019, 8:17 AM IST

ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் கடந்த மாதம் பதவியேற்ற ஒரு வாரத்திலேயே, பூடான் நாட்டுக்குச் சென்ற இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தஜிகிஸ்கானில் நடைபெற்ற சி.ஐ.சி.ஏ. என்னும் ஆசியா நாடுகளுக்கான கூட்டமைப்பு மாநாட்டிலும் பங்கேற்றார். இதனையடுத்து, ரஷ்யா துறை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு உயர் அலுவலர்களைத் தொடர்ந்து சந்தித்துவருகிறார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரின் இந்திய வருகை, பிரதமர் மோடியின் ஜி 20 மாநாட்டின் ஜப்பான் பயணம் ஆகியவை அடுத்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவிற்கான வெளிநாட்டுத் தூதர்களுக்கு, தனியார் விடுதியில் இரவு விருந்து ஒன்றை நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தார். இதில், வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தூதர்கள் பங்கேற்றனர்.

ஜெய்சங்கர், விருந்து, தூதர்கள்
வெளிநாட்டுத் தூதர்கள்

இது தொடர்பாக, இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜி. லிண்ட்னர் தனது ட்விட்டரில் பக்கத்தில், "வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்காக, வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே சிறந்த விருந்தை ஏற்பாடு செய்தார். உலகம் மிகச் சிறந்தது, நீண்ட நாள் நண்பர்களைச் சந்திக்க முடிந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் கடந்த மாதம் பதவியேற்ற ஒரு வாரத்திலேயே, பூடான் நாட்டுக்குச் சென்ற இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தஜிகிஸ்கானில் நடைபெற்ற சி.ஐ.சி.ஏ. என்னும் ஆசியா நாடுகளுக்கான கூட்டமைப்பு மாநாட்டிலும் பங்கேற்றார். இதனையடுத்து, ரஷ்யா துறை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு உயர் அலுவலர்களைத் தொடர்ந்து சந்தித்துவருகிறார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரின் இந்திய வருகை, பிரதமர் மோடியின் ஜி 20 மாநாட்டின் ஜப்பான் பயணம் ஆகியவை அடுத்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவிற்கான வெளிநாட்டுத் தூதர்களுக்கு, தனியார் விடுதியில் இரவு விருந்து ஒன்றை நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தார். இதில், வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தூதர்கள் பங்கேற்றனர்.

ஜெய்சங்கர், விருந்து, தூதர்கள்
வெளிநாட்டுத் தூதர்கள்

இது தொடர்பாக, இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜி. லிண்ட்னர் தனது ட்விட்டரில் பக்கத்தில், "வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்காக, வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே சிறந்த விருந்தை ஏற்பாடு செய்தார். உலகம் மிகச் சிறந்தது, நீண்ட நாள் நண்பர்களைச் சந்திக்க முடிந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.

Intro:விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.


Body:திருச்சி:
திருச்சியில் இஸ்லாமிய ஆராய்ச்சி மையத் தொடக்க விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மதசார்பற்ற கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிகரமாக வழி நடத்திச் செல்கிறார். அமைச்சர்கள் யாகம் நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த யாகம் வளர்ப்பது அரசு செய்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே குடிநீர் பஞ்சம் உள்ளது. இது தேசிய பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. மத்திய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் அதிகம் உள்ள இடங்களில் இருந்து தண்ணீர் குறைவான இடங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்வது மனிதாபிமான நடவடிக்கை. உண்மையிலேயே ஜோலார்பேட்டையில் அங்குள்ள மக்களுக்கு பிரச்சினை இல்லை என்றால் எடுத்துச் செல்லலாம். ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் இன்னும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்றார்.



Conclusion:ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் இன்னும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற திருமாவளவன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.