பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை ஜப்பான் சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்நாட்டுப் பிரதமர் சின்ஷோ அபேவை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு சிறப்பாக அமைந்திருந்ததாக ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் இந்தியாவின் நோக்கத்தை தான் வெளிப்படுத்தியதாகக் கூறினார்.