சீனாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கரோனா வைரஸ் தொற்று படிப்படியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவிலிருந்து பல பகுதிகளுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவில் சான்ஸி நகரில் புதிதாக இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கரோனா அறிகுறிகள் தென்படாமல் இருந்த 20 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதேபோல் சீனாவுக்கு வந்த மூவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 960 ஆக உள்ளது.
இதுவரை கரோனா வைரசால் சீனாவில் 82 ஆயிரத்து 883 பேர் பாதிக்கப்பட்டதில் 77 ஆயிரத்து 911 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 633 பேர் உயிரிழந்தனர். தற்போது கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 339 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இத்தாலியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பு?