ETV Bharat / international

ஆஸ்திரேலியாவின் கரோனா தடுப்பு மருந்து - தற்போது நிலை என்ன?

author img

By

Published : Nov 13, 2020, 4:27 PM IST

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்படும் கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவச் சோதனைக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Australian COVID-19 vaccine
Australian COVID-19 vaccine

உலகெங்கும் பல லட்சம் பேரைக் கொன்றுகுவித்துள்ள கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்களின் கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும் சர்வதேச நாடுகள் அந்தத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த தயக்கம் காட்டிவருகின்றன.

மேலும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தங்களின் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு அந்நாட்டு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்ததாலேயே மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பால் யங் கூறுகையில், "முதல்கட்ட பரிசோதனையில் இந்த தடுப்பு மருந்து உடலில் தேவையான அளவு ஆன்ட்டிபாடிகளை தூண்டுவது உறுதியாகியுள்ளது. மேலும், நாங்கள் உருவாக்கும் தடுப்புமருந்தை குறைவான டோஸ்கள் அளித்தால் போதும். இதன்மூலம் உற்பத்தியில் எழும் சில சிக்கல்களும் களையப்படும்" என்றார்.

முன்னதாக, 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து ஆஸ்திரேலிய மக்களுக்கும் தடுப்பு மருந்தை வழங்குவதே இலக்கு என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: உலக அளவிலான கரோனா பாதிப்பு நிலவரம் : தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா

உலகெங்கும் பல லட்சம் பேரைக் கொன்றுகுவித்துள்ள கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்களின் கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும் சர்வதேச நாடுகள் அந்தத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த தயக்கம் காட்டிவருகின்றன.

மேலும், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தங்களின் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு அந்நாட்டு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்ததாலேயே மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பால் யங் கூறுகையில், "முதல்கட்ட பரிசோதனையில் இந்த தடுப்பு மருந்து உடலில் தேவையான அளவு ஆன்ட்டிபாடிகளை தூண்டுவது உறுதியாகியுள்ளது. மேலும், நாங்கள் உருவாக்கும் தடுப்புமருந்தை குறைவான டோஸ்கள் அளித்தால் போதும். இதன்மூலம் உற்பத்தியில் எழும் சில சிக்கல்களும் களையப்படும்" என்றார்.

முன்னதாக, 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து ஆஸ்திரேலிய மக்களுக்கும் தடுப்பு மருந்தை வழங்குவதே இலக்கு என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: உலக அளவிலான கரோனா பாதிப்பு நிலவரம் : தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.