மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தில் 56 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சொகுசுப் பேருந்து சாங்டி நகர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், படுகாயங்களுடன் சிக்கி தவித்த 28 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக இரண்டு ஓட்டுநர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சீனாவில் தொடர்ந்து பல்வேறு வகையிலான சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், இதனைத் தவிர்க்க போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.