கோவிட் 19 தொற்று சீனாவில் கண்டறியப்பட்டாலும் அதன் மைய பகுதியாக தற்போது ஐரோப்பா நாடுகளும், அமெரிக்காவும் மாறிவிட்டன. இதனால், பல நாடுகளிலும் மக்கள் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மிகவும் எளிதாக பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக 72, 840 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,53,155ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,23,400 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம், 5,419 பேர் இத்தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14, 247ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 22, 115 பேரும், இத்தாலியில் 19,899 பேரும், ஸ்பெயினில் 17,209 பேரும் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' குறித்து அறிவோம்!