ETV Bharat / international

சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரைவில் மாநாடு - பிரிக்ஸ்

author img

By

Published : Sep 27, 2019, 12:14 PM IST

நியூயார்க்: சர்வதேச அளவில் அதிகரித்துவரும் பயங்கரவாதத்தைத் தடுக்க விரிவான மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

BRICS

பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற வருடாந்திர கூட்டம் ரஷ்யா தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைபெற்றது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பயங்கரவாதத்தை எந்த வடிவத்தில் யார் எங்கு வெளிப்படுத்தினாலும் அது கண்டிக்கத்தக்க ஒன்று. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தெளிவான ஒரு அணுகுமுறை விரைவில் உருவாக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச விதிகளின்படியும் ஐநாவின் வழிகாட்டுதலுக்கு இணங்கவும் பயங்கரவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் தடுக்கும் வகையில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஒரு விரிவான மாநாட்டை விரைவில் நடத்த வேண்டும் என்று பிரிக்ஸ் உலக நாடுகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டிற்குள் துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியம் எடுத்த உறுதிப்பாட்டுக்கும் இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்கலாமே:ஐநா அமைப்பின் பொதுச்சபைக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற வருடாந்திர கூட்டம் ரஷ்யா தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைபெற்றது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பயங்கரவாதத்தை எந்த வடிவத்தில் யார் எங்கு வெளிப்படுத்தினாலும் அது கண்டிக்கத்தக்க ஒன்று. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தெளிவான ஒரு அணுகுமுறை விரைவில் உருவாக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச விதிகளின்படியும் ஐநாவின் வழிகாட்டுதலுக்கு இணங்கவும் பயங்கரவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் தடுக்கும் வகையில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஒரு விரிவான மாநாட்டை விரைவில் நடத்த வேண்டும் என்று பிரிக்ஸ் உலக நாடுகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டிற்குள் துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியம் எடுத்த உறுதிப்பாட்டுக்கும் இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்கலாமே:ஐநா அமைப்பின் பொதுச்சபைக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.