ETV Bharat / international

கோவிட் 19: பிரிட்டன் தடுப்புமருந்து சோதனைக்கு அனுமதியளித்தது அமெரிக்கா!

author img

By

Published : Oct 24, 2020, 7:52 AM IST

வாஷிங்டன்: மருத்துவ காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்புமருந்து சோதனையை மீண்டும் தொடங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

AstraZeneca resumes US CoVID-19 vaccine trial
AstraZeneca resumes US CoVID-19 vaccine trial

கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொற்றுக்கு தடுப்புமருந்து கண்டிபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்புமருத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில், இந்த தடுப்புமருந்தை எடுத்துக்கொண்ட ஒருவர் திடீரென்று நரம்பியல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டார். இதனால் மருத்துவ சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட விசாரணைக்குழு மருத்துவ சோதனையை மீண்டும் தொடங்க அனுமதி அளித்தது. அமெரிக்கா நீங்கலாக பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த செப்டம்பர் மாதமே இந்த தடுப்புமருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்புமருந்து சோதனையை மீண்டும் தொடங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவும் எங்கள் கரோனா தடுப்புமருந்து சோதனையை மீண்டும் தொடங்க அனுமதியளித்துள்ளது. உலகளவில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் பாதுகாப்பு தரவுகளை பரிசீலனை செய்து எஃப்.டி.ஏ இந்த முடிவை எடுத்துள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, உலகெங்கும் இதுவரை 4.20 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்புமருந்து: இறுதிகட்ட மருத்துவ சோதனையில் பாரத் பயோடெக்!

கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொற்றுக்கு தடுப்புமருந்து கண்டிபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்புமருத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில், இந்த தடுப்புமருந்தை எடுத்துக்கொண்ட ஒருவர் திடீரென்று நரம்பியல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டார். இதனால் மருத்துவ சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட விசாரணைக்குழு மருத்துவ சோதனையை மீண்டும் தொடங்க அனுமதி அளித்தது. அமெரிக்கா நீங்கலாக பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த செப்டம்பர் மாதமே இந்த தடுப்புமருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்புமருந்து சோதனையை மீண்டும் தொடங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவும் எங்கள் கரோனா தடுப்புமருந்து சோதனையை மீண்டும் தொடங்க அனுமதியளித்துள்ளது. உலகளவில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் பாதுகாப்பு தரவுகளை பரிசீலனை செய்து எஃப்.டி.ஏ இந்த முடிவை எடுத்துள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, உலகெங்கும் இதுவரை 4.20 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்புமருந்து: இறுதிகட்ட மருத்துவ சோதனையில் பாரத் பயோடெக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.